தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
திண்டுக்கல்,தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதன்படி இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் ஆணையர் எஸ்.சரவணன் உத்தரவின் பெயரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ஆத்தூர் நிலக்கோட்டை வேடசந்தூர் நத்தம் உள்ளிட்ட ஏழு தொகுதிகளிலும் உள்ள மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். தற்போது பறக்கும் படை குழு - 24 அரசு அதிகாரிகள் 144காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன் வீடியோ பதிவு செய்வதற்காக 72 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிலையான கண்காணிப்பு குழுவில் - 24 அரசு அதிகாரிகள், 144காவல்துறை அதிகாரிகள் மற்றும் 72 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கண்காணிப்பு குழுவில் 8 அரசு அதிகாரிகள், 48 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 8 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுமான S. சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலகத்தை பார்வையிட்டு பறக்கும் படை அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டத்தின் நுழைவாயில் எல்லைகளில் காவல்துறை உதவியுடன் சோதனையில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதேபோல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தேனி மாவட்டத்தில் 48 பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 12 என்ற அடிப்படையில் 48 தேர்தல் பறக்கும் படை வாகனம் தொகுதிவாரியாக புறப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பறக்கும் படை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்கள் அந்தந்த தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















