மேலும் அறிய

தேனி : நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை.. அதிரவைத்த விவசாயிகள்..!

நெல் விவசாயத்தில் செலவு அதிகம் என்பதால் வைகை ஆற்றின் கரையோர விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்

தேனி மாவட்டம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது இயற்கையும், விவசாயமும்தான். தேனி மாவட்டத்தில்  நெல், வாழை, தென்னை, திராட்சை, கரும்பு போன்றவை அதிகப்படியாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக நெல் விவசாயம் தேனி மாவட்டத்தை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய விவசாயமாக பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் நெல் விவசாயம் அமோகமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போதைய சூழலில் நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை என தெரிவித்து வருகின்றனர் ஆண்டிப்பட்டி விவசாயிகள். 

தேனி : நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை.. அதிரவைத்த விவசாயிகள்..!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிச்செட்டிபட்டி வரையில் ஆயக்கட்டு பகுதிகளில் 14, 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை . இந்த முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் வைகை அணை மூலம் தேக்கப்பட்டு, மதுரை,  ராமநாதபுரம்,  சிவகங்கை,  திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கு உதவுகிறது. நெல் விவசாயத்தில் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக , மற்ற மாவட்டங்களுக்கு உதாரணமாக விளங்கும் தேனி மாவட்டத்தில் நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை என விவசாயிகள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி : நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை.. அதிரவைத்த விவசாயிகள்..!

போதிய நீர் வரத்து இருந்தாலும், விளைச்சலுக்கு பிறகு நெல் விவசாயத்தில் உரிய மகசூல் கிடைப்பதில்லை என்றும், விதை நெல் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளது என்றும், தேர்ந்தெடுத்த விதை ரகங்கள் சரியான நாட்களில் முளைப்பதில்லை என்றும், சிரமப்பட்டு விவசாயம் செய்த பின்னும் உரிய விலை போகவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.  திராட்சை,தக்காளி, வாழை, வெங்காயம் போன்ற குறுகிய கால பயிர்கள் விவசாயம் செய்யும் போது அதற்கான பலன் உரிய காலத்திலே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேனி : நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை.. அதிரவைத்த விவசாயிகள்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சீரங்காபுரம், வேகவதி ஆசிரமம் வாடிப்பட்டி வெள்ளையத்தேவன்பட்டி,  மூணான்பட்டி, தர்மத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி, புலிமான்கோம்பை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. வைகை ஆற்றில் செல்லும் நீரால் கரையோர விவசாய நிலங்களில் ஆண்டு முழுவதும் நீர் சுரப்பு ஏற்படும் இதனால் இப்பகுதிகளில் வாழை காய்கறிகள் சாகுபடி அதிகம் நடைபெறும். பருவகால   மழைக்கால பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் கடந்த காலத்தில் நெல் சாகுபடி செய்தனர்.  தற்போது வைகை அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். அணையில் தற்போது 55.97அடி நீர் உள்ளதால், விநாடிக்கு 719 கன அடி உபரிநீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் செல்லும் நீரால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.  போதுமான நீர் இருப்பு இருந்தாலும் ஆண்டிப்பட்டி விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

தேனி : நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை.. அதிரவைத்த விவசாயிகள்..!

இதுகுறித்து  ஆண்டிபட்டி விவசாயிகள் கூறுகையில், "நெல் சாகுபடியில் செலவு அதிகரிப்பதுடன் அறுவடைக்குப்பின் நிறைவான லாபம் கிடைப்பதில்லை. திராட்சை , வாழை, தக்காளி,  வெண்டை, வெங்காயம், கத்தரி சாகுபடியில் குறுகிய காலத்தில்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கிறது. வியாபாரிகள் எடுத்துச் சென்ற நெல் பயிர்களுக்கு உரிய காலத்தில் தொகை கொடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இந்த நெல் விவசாயத்தில் உள்ளது. இதனால் நெல் சாகுபடியை கைவிடுவதற்கான காரணமாக இருப்பதாக ஆண்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget