மேலும் அறிய

தேனி அருகே கோம்பை பண்ணைப்புரத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

முருகன் காயத்தோடு இறந்துகிடந்ததையும், அவரது அருகில் யானை சாணம் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் முருகன் (50). அப்பகுதியில் இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். முருகன், கடந்த சில வாரங்களாக கோம்பை பண்ணைப்புரத்தில், 18-ம் கால்வாய் கரையில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு விவசாய கூலிவேலைக்கு சென்று வந்தார். அதன்படி, நேற்று முன்தினம் வழக்கம்போல் அந்த தென்னந்தோப்புக்கு வேலைக்காக அவர் சென்றிருந்தார். மாலையில் வேலை முடிந்ததும் முருகன் வீட்டிற்கு செல்லாமல், இரவு தோட்டத்திலேயே தங்கியுள்ளார்.


தேனி  அருகே கோம்பை பண்ணைப்புரத்தில்  யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

தோட்டத்தில் தனியாக தரையில் படுத்து ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார். இந்தநிலையில் நள்ளிரவில் அந்த தென்னந்தோப்புக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அப்போது தோட்டத்தில் படுத்திருந்த முருகனை அந்த காட்டு யானை முதலில் காலால் எட்டி உதைத்தது.  யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்து எழுந்த அவர், மேலும் அவர் அங்கிருந்து தப்பிஓட முயன்றுள்ளார். அதற்குள் அந்த யானை, முருகனை தனது தும்பிக்கையால் தாக்கியது. யானை தாக்கியதில் நிலைகுலைந்த முருகன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதற்கிடையே நேற்று காலை அங்குள்ள தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் மற்றும் கூலிதொழிலாளர்கள், முருகன் காயத்தோடு இறந்துகிடந்ததையும், அவரது அருகில் யானை சாணம் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த இடத்தில் யானையின் கால்தடங்கள் இருந்தன. உடனே இதுகுறித்து விவசாயிகள், உத்தமபாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


தேனி  அருகே கோம்பை பண்ணைப்புரத்தில்  யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் எப்படி இறந்தார் என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில், யானை தாக்கியதற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. அதன்படி, காட்டு யானை தாக்கி முருகன் இறந்ததை உறுதி செய்தனர். இதற்கிடையே முருகன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் முருகனின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் முருகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், விவசாயிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget