மேலும் அறிய

நியூட்ரினோ ஆய்வு மையம் வழக்கு: கால அவகாசம் கேட்ட மத்திய அரசு; 3 வாரத்திற்கு ஒத்திவைப்பு

மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

தேனி உத்தமபாளையம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் வழக்கில் ஆஜராக மத்திய அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளார் வைகோ கடந்த 2015ல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு பொட்டிபுரம் பகுதி மலையில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த மலைப்பகுதி கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மதிகெட்டான்சோலை தேசியப் பூங்கா முதல் பெரியாறு வரையிலான புலிகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது. சுரங்கம் தோண்டுவதாலோ பாறைகளைப் பெயர்த்தெடுப்பதாலோ அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும், புலிகள் வழித்தடத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என இந்த ஆய்வகத்தின் திட்ட இயக்குநர் கூறுகிறார். ஆனால் சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதோடு வன பகுதியில் உள்ள வன உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.

எனவே, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு  தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிபதிகள் மகாதேவன்,  சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் வழக்கில் ஆஜராக மத்திய அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 


மற்றொரு வழக்கு

கோயில் விவசாய இடத்தில் எவ்வாறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி 

இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டிட ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு குறித்து திருநெல்வேலியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்துஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்தில் அருள்மிகு முப்பிடஆதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தில் தென்னம் தோப்பு உள்ளது. இந்த இடத்தில் தனி நபர்கள் குடிசைகள் அமைத்து தங்கி வந்தனர். தற்போது இந்த இடத்தில் கான்கிரீட் கட்டிடம் அமைத்துள்ளனர்.

கோயில் இடமான இந்த இடம் விவசாயத்திற்கான வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தனிநபர்கள் கான்கிரீட் கட்டிடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இந்து அறநிலையத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு முப்பிடஆதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டிட ஆக்கிரமிப்பை அகற்றி பழைய நிலைக்கு கொண்டு வரக் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில் விவசாய இடத்தில் எவ்வாறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி வழக்கு குறித்து திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை: 28-06-2026 போலியோ சொட்டு மருந்து முகாம்.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு !
மதுரை: 28-06-2026 போலியோ சொட்டு மருந்து முகாம்.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு !
விருதுநகர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2026-27: அரிய வேலைவாய்ப்பு வாய்ப்பு!
விருதுநகர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2026-27: அரிய வேலைவாய்ப்பு வாய்ப்பு!
மீனாட்சி கோயில் குடமுழக்கு: தமிழில் மந்திரம் ஓத வழக்கு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மீனாட்சி கோயில் குடமுழக்கு: தமிழில் மந்திரம் ஓத வழக்கு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்: ரூ.25 லட்சம் வரை கடன் - கல்வி, தொழில் வளர்ச்சிக்கு வழி!
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்: ரூ.25 லட்சம் வரை கடன் - கல்வி, தொழில் வளர்ச்சிக்கு வழி!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar : எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Ather 450X Vs Honda Activa e: EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
Embed widget