மேலும் அறிய

வனத்துறையில் வேலை செய்வதாக கூறி இளைஞர் திருமணம்- ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த போது சிக்கினார்

’’வனப்பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்போவதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த நிலையில் சந்தேகம் அடைந்த மாமனார் வனத்துறை அலுவலகம் சென்று விசாரித்தார்’’

தேனி மாவட்டம் கூடலூர் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் ராமர் என்பவர். இவரது மகன் ஏங்கல்ஸ். இவருக்கும், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கர்ணன் மகள் ஹர்சிலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
 

வனத்துறையில் வேலை செய்வதாக கூறி இளைஞர் திருமணம்-  ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த போது சிக்கினார்
 
தற்போது அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.  ஏங்கல்ஸ், ஹர்சிலாவை திருமணம் முடிக்க பேச்சுவார்த்தை செய்யும்போது ஏங்கல்ஸ் தன்னை வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை வரை உள்ள வனப்பகுதி தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனை நம்ப வைப்பதற்காக அவர், வனத்துறை வாகனம் முன்பு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் காட்டியுள்ளார்.
 
இதனை நம்பிய ஹர்சிலா குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து, மணம் முடித்து வைத்தனர். திருமணத்தின்போது 65 பவுன் நகைகளையும், 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு வனத்துறை அலுவலகத்திற்கு செல்வதாக கூறி தினசரி வெளியே சென்று வந்துள்ளார்.  இந்தநிலையில் அவர் புதிதாக ஹெலிகாப்டர் தளம் அமைக்க இருப்பதாக தனது மனைவி மற்றும் மாமனாரிடம் கூறினார்.

வனத்துறையில் வேலை செய்வதாக கூறி இளைஞர் திருமணம்-  ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த போது சிக்கினார்
 
மேலும் அதற்காக தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கர்ணன், வனத்துறை அலுவலகங்களுக்கு சென்று விசாரித்தார். அப்போது அவர் வனத்துறை அதிகாரி இல்லை என்பதும், தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதனை கேட்டு கர்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ஏங்கல்ஸ் பணம் மற்றும் கூடுதல் நகைகள் கேட்டு ஹர்சிலாவை சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

வனத்துறையில் வேலை செய்வதாக கூறி இளைஞர் திருமணம்-  ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த போது சிக்கினார்
 
இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஹர்சிலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி வனத்துறை அதிகாரியாக வலம் வந்த ஏங்கல்சை நேற்று கைது செய்தனர்.  இதுபோன்று வேறு ஏதேனும் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்றும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர மோசடி திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ஏங்கல்ஸ் உறவினர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.