மேலும் அறிய

Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

தேனி மாவட்டம் போடி அருகே ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்பட்டார்.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிறைக்காடு அருகே ஊத்தாம்பாறை ஆறு உள்ளது. இங்கு மின்வாரிய ஊழியர்கள் 14 பேர் குளிக்க சென்றனர். இதில் 10 பேர் ஆற்றின் ஒரு கரையில் குளித்து கொண்டிருந்தனர். மற்ற 4 பேரில் 3 பேர் மறு கரையிலும், ஒருவர் ஆற்றில் இறங்கியும் குளித்து கொண்டிருந்தனர். இவர்கள் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.


Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

பின்னர் அது காட்டாற்று வெள்ளமாக மாறியது. இதையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டுள்ளனர். இதற்கிடையே ஆற்றின் ஒரு கரையில் குளித்து கொண்டிருந்த போடியை சேர்ந்த வசந்த் (22), வினோத் (27), பாலகுரு (24), முத்து கணேஷ் (24), கார்த்திக் (20), ராம் குமார் (26), காந்தி (22) உள்பட 10 பேர் வெள்ளம் வருவதை பார்த்து சுதாரித்து கொண்டு கரை ஏறி தப்பினர். ஆற்றின் மறுகரையில் குளித்து கொண்டிருந்த போடியை சேர்ந்த பாண்டியராஜ் (26), குமரேசன் (32), போடி அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (22) ஆகிய 3 பேரும் கரையை கடக்க முடியாமல் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இந்நிலையில் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த தேனி அருகே உள்ள சுக்குவேடன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.


Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

இதையடுத்து கரை ஏறி உயிர் தப்பிய மற்றவர்கள் போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு குரங்கணி போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மறுகரையில் தவித்து கொண்டிருந்த 3 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.  இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சுரேசை தீயணைப்பு படையினர் தேடினர். இந்த தேடுதல் பணியானது இரவு 7.30 மணி வரை நீடித்தது. பின்னர் சுரேசை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில் இரவு நேரமானதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது.


Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

இந்த தேடுதல் பணி இன்று காலை தொடங்கியது. அப்போது பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது காட்டாற்று வெள்ளத்தில் மின்வாரிய ஊழியர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுரேசுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணமானது. இவருக்கு கிருத்திகா(23) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரசு நியமனங்களில் தவறில்லை... முதலமைச்சர் உதவியாளர்கள் குறித்து - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் !
அரசு நியமனங்களில் தவறில்லை... முதலமைச்சர் உதவியாளர்கள் குறித்து - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் !
3 நாள் தொடர் விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் கூடும் சுற்றுலாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்!
3 நாள் தொடர் விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் கூடும் சுற்றுலாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்!
தமிழ்சமுதாயத்தில் உள்ள ஆட்கள் விஜய் கண்ணில் படவில்லையா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
தமிழ்சமுதாயத்தில் உள்ள ஆட்கள் விஜய் கண்ணில் படவில்லையா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து பாக்யராஜ் உயிரிழப்பு: வையாபுரி வேதனை!
பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து பாக்யராஜ் உயிரிழப்பு: வையாபுரி வேதனை!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Suzuki Burgman Street Review: 56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Embed widget