மேலும் அறிய

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

டால்பின் இனங்கள் அழிந்து வருவதை தடுக்க மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங்  மூலம் கடலுக்குள் நீந்தி சென்று பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுகின்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் தொடங்கி  தூத்துக்குடி மாவட்டம் வரை  அமைந்துள்ள புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல் பசு, டால்பின்கள் இப்பகுதியில் அதிகம்  காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக “ஓங்கி” எனப்படும் கூன்முதுகி ஓங்கி உள்ளிட்ட அரியவகை டால்பின்கள் வாழ்கின்றன. ஆனால் இந்த டால்பின் இனங்கள் சமீபகாலமாக படகுகளில் மோதியும்,  மீனவர்களால்  கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் அவைகளை உண்டு அரிய வகை டால்பின் இனங்கள் அழிந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங்  மூலம் கடலுக்குள் நீந்தி சென்று அங்குள்ள பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

ஆனால் இந்த டால்பின் இனங்கள் சமீபகாலமாக படகுகளில் மோதியும்,  மீனவர்களால்  கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் அவைகளை உண்டு அரிய வகை டால்பின் இனங்கள் அழிந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங்  மூலம் கடலுக்குள் நீந்தி சென்று அங்குள்ள பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். மன்னார் வளைகுடா பகுதியில், சமீப காலமாக பாறைகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கியும் உண்டும்  டால்பின், கடல் பசு உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில், பவளப்பாறை மற்றும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிக மாக வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்கள் அடிக்கடி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன. இவைகளில் பெரும்பாலானவை பாறைகள் மீது மோதியும், மீனவர்களின் வலைகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன.

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

டால்பின்கள் அதிசயிக்கத்தக்க விதத்தில் சமூக மனப்பான்மை கொண்டு மனிதர்கள் போலவே குழுவாக உணவு தேடுவது, அவற்றைப் பகிர்ந்து உண்ணுவது என வாழ்பவை. கடலில் ஜாலி பார்ட்டி என்றால் சந்தேகமின்றி டால்பினை சுட்டிக் காட்டலாம். சுட்டித்தனமாக சக டால்பின்களோடு விளையாடுவது, சண்டையிடுவது என மனிதர்களைப் போலவே பொழுது போக்காகவே வாழும் வகை இவை.  டால்பின்கள் தம்மோடு இயற்கை அளித்த ரேடாராக எதிரொலியைக் கொண்டுள்ளது. இத்திறனை வைத்தே வழி கண்டறிந்து உணவு தேடுகிறது. கடல் மட்டத்தைத் தாண்டி சுமார் 20 அடி உயரம் வரை கூட எம்பிக் குதித்து விளையாடும் சுறுசுறு குறும்புத்தனம் கொண்டவை இந்த டால்பின்கள். காயம்பட்ட மீன்களை பாதுகாப்பாக எடுத்து வந்து சுவாசிக்கச் செய்ய உதவுவதில் டால்பின்களுக்கு இணையாக எந்த விலங்கினமும் கிடையாது. மீன்களுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கும் உதவி செய்யக் கூடியவை இவை. டால்பின்கள் நீண்ட ஆயுள் கொண்டவை. ஒவ்வொரு டால்பின் மீனும் தனக்கே உரிய தனித்துவ விசில் ஒலியைக் கொண்டுள்ளது.

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

இந்த டால்பின்கள் மீனவர்கள் வலைகள், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறைப்பை பாதிக்கப்பட்டும், மேலும்,  அதிக இரைச்சலுடன் செல்லும் படகுகளாலும்  உயிரிழப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கடலில் கலப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மன்னார் வளைகுடா கடல் உயிரின காப்பாளர் துறை சார்பாக அங்குள்ள கடலில் மிதக்கும் மற்றும்  கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக்குகளை அகற்ற தனியே ஸ்கூபா டைவிங் வீரர்களை கொண்டு மாதம்தோறும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக டால்பின் உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழப்பை தடுக்க முடியும். மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது சேதம் அடையும் பழைய  வலைகளை கடலுக்குள் வீசி எறியாமல் அதை எடுத்துக்கொண்டு கரைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஏனென்றால்,  கடலுக்குள் வீசி எறியும் சேதமடைந்த வலைகளை உண்ணும் டால்பின்கள் உயிரிழக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் லேசான விசில் சப்தம் எழுப்பியவுடன் நண்பன் போல் கூடவே வரும், வந்தால் கரைக்கு வரும் வழியில் படகுகளில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது எனவே கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் டால்பின்களை தொந்தரவு செய்யக்கூடாது இதன் மூலம் அரிய வகை டால்பின் இனங்களை அழிவிலிருந்து காக்க முடியும்  என மன்னார் வளைகுடா வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !
அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை... மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் !
அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை... மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் !
இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!
இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget