மேலும் அறிய

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

டால்பின் இனங்கள் அழிந்து வருவதை தடுக்க மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங்  மூலம் கடலுக்குள் நீந்தி சென்று பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுகின்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் தொடங்கி  தூத்துக்குடி மாவட்டம் வரை  அமைந்துள்ள புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல் பசு, டால்பின்கள் இப்பகுதியில் அதிகம்  காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக “ஓங்கி” எனப்படும் கூன்முதுகி ஓங்கி உள்ளிட்ட அரியவகை டால்பின்கள் வாழ்கின்றன. ஆனால் இந்த டால்பின் இனங்கள் சமீபகாலமாக படகுகளில் மோதியும்,  மீனவர்களால்  கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் அவைகளை உண்டு அரிய வகை டால்பின் இனங்கள் அழிந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங்  மூலம் கடலுக்குள் நீந்தி சென்று அங்குள்ள பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

ஆனால் இந்த டால்பின் இனங்கள் சமீபகாலமாக படகுகளில் மோதியும்,  மீனவர்களால்  கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் அவைகளை உண்டு அரிய வகை டால்பின் இனங்கள் அழிந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங்  மூலம் கடலுக்குள் நீந்தி சென்று அங்குள்ள பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். மன்னார் வளைகுடா பகுதியில், சமீப காலமாக பாறைகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கியும் உண்டும்  டால்பின், கடல் பசு உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில், பவளப்பாறை மற்றும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிக மாக வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்கள் அடிக்கடி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன. இவைகளில் பெரும்பாலானவை பாறைகள் மீது மோதியும், மீனவர்களின் வலைகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன.

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

டால்பின்கள் அதிசயிக்கத்தக்க விதத்தில் சமூக மனப்பான்மை கொண்டு மனிதர்கள் போலவே குழுவாக உணவு தேடுவது, அவற்றைப் பகிர்ந்து உண்ணுவது என வாழ்பவை. கடலில் ஜாலி பார்ட்டி என்றால் சந்தேகமின்றி டால்பினை சுட்டிக் காட்டலாம். சுட்டித்தனமாக சக டால்பின்களோடு விளையாடுவது, சண்டையிடுவது என மனிதர்களைப் போலவே பொழுது போக்காகவே வாழும் வகை இவை.  டால்பின்கள் தம்மோடு இயற்கை அளித்த ரேடாராக எதிரொலியைக் கொண்டுள்ளது. இத்திறனை வைத்தே வழி கண்டறிந்து உணவு தேடுகிறது. கடல் மட்டத்தைத் தாண்டி சுமார் 20 அடி உயரம் வரை கூட எம்பிக் குதித்து விளையாடும் சுறுசுறு குறும்புத்தனம் கொண்டவை இந்த டால்பின்கள். காயம்பட்ட மீன்களை பாதுகாப்பாக எடுத்து வந்து சுவாசிக்கச் செய்ய உதவுவதில் டால்பின்களுக்கு இணையாக எந்த விலங்கினமும் கிடையாது. மீன்களுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கும் உதவி செய்யக் கூடியவை இவை. டால்பின்கள் நீண்ட ஆயுள் கொண்டவை. ஒவ்வொரு டால்பின் மீனும் தனக்கே உரிய தனித்துவ விசில் ஒலியைக் கொண்டுள்ளது.

அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

இந்த டால்பின்கள் மீனவர்கள் வலைகள், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறைப்பை பாதிக்கப்பட்டும், மேலும்,  அதிக இரைச்சலுடன் செல்லும் படகுகளாலும்  உயிரிழப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கடலில் கலப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மன்னார் வளைகுடா கடல் உயிரின காப்பாளர் துறை சார்பாக அங்குள்ள கடலில் மிதக்கும் மற்றும்  கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக்குகளை அகற்ற தனியே ஸ்கூபா டைவிங் வீரர்களை கொண்டு மாதம்தோறும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக டால்பின் உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழப்பை தடுக்க முடியும். மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது சேதம் அடையும் பழைய  வலைகளை கடலுக்குள் வீசி எறியாமல் அதை எடுத்துக்கொண்டு கரைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஏனென்றால்,  கடலுக்குள் வீசி எறியும் சேதமடைந்த வலைகளை உண்ணும் டால்பின்கள் உயிரிழக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் லேசான விசில் சப்தம் எழுப்பியவுடன் நண்பன் போல் கூடவே வரும், வந்தால் கரைக்கு வரும் வழியில் படகுகளில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது எனவே கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் டால்பின்களை தொந்தரவு செய்யக்கூடாது இதன் மூலம் அரிய வகை டால்பின் இனங்களை அழிவிலிருந்து காக்க முடியும்  என மன்னார் வளைகுடா வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget