மேலும் அறிய

’’சமோசாவுக்குள் பல்லியை வைத்து கொடுத்த பேக்கரி...!’’- சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தனியார் பேக்கரியில் வாங்கிய சமோசாவிற்குள் அரணைப்பல்லி  இருந்துள்ளது.

சமோசாவுக்குள் பல்லி இருந்தது தெரியாமல் அதை   சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி  மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதி இதனால், கீழக்கரை பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தலை கிராமத்தை கார்மேகம். இவர்  கொத்தனார் வேலை செய்து வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் வாசுதேவன், விடுமுறை என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில்  சில நாட்கள் இருந்து விட்டு நேற்று மாலை  சொந்த ஊர் திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, அங்கு  உள்ள ஒரு  தனியார் பேக்கரியில் சமோசாக்களை வாங்கி ஒரு பேப்பரில் பார்சல் செய்து   வீட்டுக்கு  கொண்டு வந்துள்ளார்.

தில்லையேந்தலை கிராமத்தில் உள்ள வீட்டை வந்து அடைந்ததும் சிறிது நேரம் நண்பர்களுடன் விளையாடி விட்டு ராமநாதபுரத்திலிருந்து வாங்கிக்கிட்டு வந்த சமோசாக்களில் ஒன்றை மட்டும் எடுத்தது தின்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் உடம்பெல்லாம் வியர்க்க  அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு பதறிப்போன தந்தை கார்மேகம் தன் மகனை ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக  கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.  

’’சமோசாவுக்குள் பல்லியை வைத்து கொடுத்த பேக்கரி...!’’- சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

இதனிடையே நல்ல ஆரோக்கியத்துடன் விளையாடி கொண்டிருந்த தன் மகன் வாசுதேவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் வரக்காரணம் என்ன என்று யோசித்த தந்தை கார்மேகம், சிறுவன் வீட்டில் சாப்பிட்ட சமோசாவை பார்த்ததில் அதை பாதி தின்ற நிலையில் மீதி சமோசாவை கீழே வீசியெறிந்ததை பார்த்துள்ளார். அதை எடுத்து பார்த்தத்தில் அரணை எனச் சொல்லப்படும் ஒரு வகை பல்லி இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

அடப்பாவிகளா சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஆசையாக வாங்கி சாப்பிடும் திண்பண்டங்களில் இதுபோன்று அஜாக்கிரதையாக விஷ ஜந்துக்களை  உள்ளே வைத்து உணவு பொருள் தயாரிப்பது அது எந்த வகையில் நியாயம் என புலம்புகிறார் சிறுவனின் தந்தை கார்மேகம்.

 

’’சமோசாவுக்குள் பல்லியை வைத்து கொடுத்த பேக்கரி...!’’- சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

 

பேக்கரி மற்றும் உணவகங்களில் பணிபுரியும்  ஊழியர்கள் அலட்சியமாகவும் சுகாதாரக்கேடாகவும், உணவுப் பொருட்கள் தயாரிப்பதால் இதுபோன்ற பிரச்சனைளை நுகர்வோர்கள்  சந்திக்க நேர்வதால், உணவு பாதுகாப்பு துறையினரும் இது போன்ற உணவு நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் வாசுதேவன், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மயக்க நிலையிலிருந்து சற்று தெளிவு அடைந்துள்ளதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் சிறுவனின் பெற்றோர்களும், உறவினர்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget