மேலும் அறிய

தரமற்ற முறையில் கட்டப்பட்ட தூதூர் பஞ்சாயத்து கட்டடம் - கன்னியாகுமரி ஆட்சியருக்கு நோட்டீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பஞ்சாயத்து கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டியவர்கள் மீதும் அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த ஜெயராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்  அதில், "எங்கள் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலகம் இடியும் நிலையில் காணப்பட்டது இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்காக 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பஞ்சாயத்து அலுவலக கட்டுமான பணிகள் ஒப்பந்ததாரர் ராஜ்குமார் என்பவரால் செய்யப்பட்டது. தரம் குறைந்த பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் சிமெண்ட் பூச்சுக்கள் கீழே விழுவதாக புகார்கள் எழுந்தன இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரிடம் முறையாக தெரிவிக்கப்பட்டது.
 
கட்டுமானத்திற்கு சிமெண்ட் மற்றும் எம்சான்ட்டை பயன்படுத்தாமல் பாறை துகள்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. கையால் தொட்டாலே விழுந்து விடும் அளவிற்கு பலம் குறைந்ததாக கட்டுமானம் இருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் வாட்ஸ் அப் மற்றும் அஞ்சல் மூலமாக புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது.
 
ஆகவே தூத்தூர் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்யவும் தரமற்ற முறையில் கட்டடத்தை கட்டியவர்கள் மீதும் அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊரக மேம்பாட்டு பிரிவின் கூடுதல் ஆட்சியர் மற்றும் ஒப்பந்ததாரர் ராஜ்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 


குற்ற வழக்கில் முன்ஜாமீன் பெற்ற விபரத்தை மறைத்துள்ளார். எனவே, அவரது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவில் தலையிட முடியாது - மதுரை கிளை
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த கோகுல் கணேஷ், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் நிராகரிக்கப்ட்டதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.அரசுத் தரப்பில், மனுதாரர் மீதான குற்றவழக்கில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த விபரத்தை மறைத்ததுள்ளார். விண்ணப்பத்தில் கூறாவிட்டாலும், சான்றிதழ் சரிபார்ப்பின் போதாவது தெரிவிக்க வேண்டும். இதையும் மறைத்துள்ளார் என்பது பின்னாளில் தெரிந்தால், பணியை பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே உண்மையை மறைத்ததாக கருதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் குற்ற வழக்கில் முன்ஜாமீன் பெற்ற விபரத்தை மறைத்துள்ளார். எனவே, அவரது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவில் தலையிட முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Embed widget