மேலும் அறிய

தரமற்ற முறையில் கட்டப்பட்ட தூதூர் பஞ்சாயத்து கட்டடம் - கன்னியாகுமரி ஆட்சியருக்கு நோட்டீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பஞ்சாயத்து கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டியவர்கள் மீதும் அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த ஜெயராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்  அதில், "எங்கள் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலகம் இடியும் நிலையில் காணப்பட்டது இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்காக 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பஞ்சாயத்து அலுவலக கட்டுமான பணிகள் ஒப்பந்ததாரர் ராஜ்குமார் என்பவரால் செய்யப்பட்டது. தரம் குறைந்த பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் சிமெண்ட் பூச்சுக்கள் கீழே விழுவதாக புகார்கள் எழுந்தன இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரிடம் முறையாக தெரிவிக்கப்பட்டது.
 
கட்டுமானத்திற்கு சிமெண்ட் மற்றும் எம்சான்ட்டை பயன்படுத்தாமல் பாறை துகள்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. கையால் தொட்டாலே விழுந்து விடும் அளவிற்கு பலம் குறைந்ததாக கட்டுமானம் இருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் வாட்ஸ் அப் மற்றும் அஞ்சல் மூலமாக புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது.
 
ஆகவே தூத்தூர் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்யவும் தரமற்ற முறையில் கட்டடத்தை கட்டியவர்கள் மீதும் அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊரக மேம்பாட்டு பிரிவின் கூடுதல் ஆட்சியர் மற்றும் ஒப்பந்ததாரர் ராஜ்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 


குற்ற வழக்கில் முன்ஜாமீன் பெற்ற விபரத்தை மறைத்துள்ளார். எனவே, அவரது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவில் தலையிட முடியாது - மதுரை கிளை
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த கோகுல் கணேஷ், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் நிராகரிக்கப்ட்டதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.அரசுத் தரப்பில், மனுதாரர் மீதான குற்றவழக்கில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த விபரத்தை மறைத்ததுள்ளார். விண்ணப்பத்தில் கூறாவிட்டாலும், சான்றிதழ் சரிபார்ப்பின் போதாவது தெரிவிக்க வேண்டும். இதையும் மறைத்துள்ளார் என்பது பின்னாளில் தெரிந்தால், பணியை பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே உண்மையை மறைத்ததாக கருதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் குற்ற வழக்கில் முன்ஜாமீன் பெற்ற விபரத்தை மறைத்துள்ளார். எனவே, அவரது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவில் தலையிட முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget