மேலும் அறிய

வெள்ளத்தை தடுக்க SPONGE CITY CONSTRUCTION முறை - மத்திய, மாநில அரசுகள் பதில்தர நீதிமன்றம் உத்தரவு

’’பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும் இத்திட்டத்தினை இந்தியாவில் செயல்படுத்த முடியுமா? - மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி’’

மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் மொத்தம் 39 ஆயிரம் நீர் நிலைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 50% நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல நீர்வழிப் பாதைகள், வாய்க்கால்கள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்று அப்பகுதி மக்கள் குடிநீருக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்காததே காரணம். நீர்நிலைகளில் மண் மற்றும் குப்பை கழிவுகள் சேருவதன் காரணமாகவே பெருவெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான கண்மாய்கள் முறையாக சர்வே செய்யப்படதில்லை. இதனால் கண்மாய்களின் எல்லைகள், ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகியதாக மாறிக்கொண்டே வருகின்றன. அரசும் நீர்நிலைகளில் ஏராளமான கட்டிடங்களை கட்டி உள்ளது. இதன் காரணமாகவே மழை காலங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர்நிலைகளில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி அவற்றை தூர்வாரி பராமரிப்பது போன்றவையே வெள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தீர்வாக அமையும். ஆனால் அரசு அதற்கான முறையான நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை. 
 

வெள்ளத்தை தடுக்க SPONGE CITY CONSTRUCTION முறை - மத்திய, மாநில அரசுகள் பதில்தர நீதிமன்றம் உத்தரவு
 
உலக வெப்பமயமாதலால் ஏராளமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் தண்ணீரை பாதுகாப்பதும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் அரசின் கடமை. சீனா போன்ற நாடுகளில் sponge city rainwater system எனும் பெயரில் மழை நீரை முறையாக சேமிப்பது அதற்கான வடிகால் திட்டத்தை முறையாக அமைப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, அதிக வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் sponge city construction முறையை அமல்படுத்தவும், 1950ஆம் ஆண்டு அரசு ஆவணத்தின் அடிப்படையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளில் பட்டா வழங்கிய அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இது மிகப்பெரிய திட்டம் இதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து  சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற திட்டங்கள் அரசின் கொள்கை ரீதியான முடிவு எனக் கூறிய நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தலைப்பு செய்திகள்

ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget