மேலும் அறிய

வெள்ளத்தை தடுக்க SPONGE CITY CONSTRUCTION முறை - மத்திய, மாநில அரசுகள் பதில்தர நீதிமன்றம் உத்தரவு

’’பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும் இத்திட்டத்தினை இந்தியாவில் செயல்படுத்த முடியுமா? - மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி’’

மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் மொத்தம் 39 ஆயிரம் நீர் நிலைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 50% நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல நீர்வழிப் பாதைகள், வாய்க்கால்கள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்று அப்பகுதி மக்கள் குடிநீருக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்காததே காரணம். நீர்நிலைகளில் மண் மற்றும் குப்பை கழிவுகள் சேருவதன் காரணமாகவே பெருவெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான கண்மாய்கள் முறையாக சர்வே செய்யப்படதில்லை. இதனால் கண்மாய்களின் எல்லைகள், ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகியதாக மாறிக்கொண்டே வருகின்றன. அரசும் நீர்நிலைகளில் ஏராளமான கட்டிடங்களை கட்டி உள்ளது. இதன் காரணமாகவே மழை காலங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர்நிலைகளில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி அவற்றை தூர்வாரி பராமரிப்பது போன்றவையே வெள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தீர்வாக அமையும். ஆனால் அரசு அதற்கான முறையான நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை. 
 

வெள்ளத்தை தடுக்க SPONGE CITY CONSTRUCTION முறை - மத்திய, மாநில அரசுகள் பதில்தர நீதிமன்றம் உத்தரவு
 
உலக வெப்பமயமாதலால் ஏராளமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் தண்ணீரை பாதுகாப்பதும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் அரசின் கடமை. சீனா போன்ற நாடுகளில் sponge city rainwater system எனும் பெயரில் மழை நீரை முறையாக சேமிப்பது அதற்கான வடிகால் திட்டத்தை முறையாக அமைப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, அதிக வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் sponge city construction முறையை அமல்படுத்தவும், 1950ஆம் ஆண்டு அரசு ஆவணத்தின் அடிப்படையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளில் பட்டா வழங்கிய அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இது மிகப்பெரிய திட்டம் இதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து  சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற திட்டங்கள் அரசின் கொள்கை ரீதியான முடிவு எனக் கூறிய நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
Embed widget