Top 10 News Headlines: ஆளுநர் ஆக்ஷன், ஸ்டாலின் ரியாக்ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Jan 20th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு
“ஆளுநரின் மைக் பல முறை ஆஃப் செய்யப்பட்டு, அவர் பேசுவதற்க்கு அனுமதிக்கப்படவில்லை” சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சட்ட ஒழுங்கு பிரச்னையை எழுப்பி அதிமுகவும், ஆளுநர் உரை தொடர்பான முதலமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவும் வெளிநடப்பு.
"ஆளுநர் உரை நடைமுறையை மாற்ற நடவடிக்கை"
சட்டமன்றங்களில் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை அமலுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பேச்சு
ஆளுநர் விருந்து புறக்கணிப்பு
குடியரசு நாளை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியும் இதே முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி பரிந்துரை
BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC) ஒன்றிணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை. அமெரிக்க டாலரின் சார்பை குறைக்க உதவும் இத்திட்டத்தை, நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டின் முக்கிய அஜெண்டாவாக சேர்க்குமாறும் ரிசர்வ் வங்கி அரசுக்கு ஆலோசனை எனவும் தகவல்
எஸ்பிஐ கணிப்பு
2030ம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $4,000ஆக உயர்ந்து 'மேல்-நடுத்தர வருவாய்’ கொண்ட நாடாக உருவெடுக்கும் என SBI கணிப்பு. ஜெர்மனியை 2028ம் ஆண்டுக்குள் பின்னுக்குத் தள்ளி, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும் எனவும் SBI ஆய்வறிக்கை கூறுகிறது.
21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா என்ற கோணத்தில் சோதனை என தகவல். இவ்வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எக்ஸ் தளத்திற்கு ஆபத்து
உலகளவில் மொபைல் பயன்பாட்டில் 14.1 கோடி தினசரி பயனர்களைக் கொண்டு X செயலியை முந்தியது Threads செயலி. 12.5 கோடி மொபைல் பயனர்களைக் கொண்டுள்ள X, வெப் பிரவுசர் பயன்பாட்டில் 14.5 கோடி தினசரி பயனர்களைக் கொண்டு தொடர்ந்து முன்னிலை.
ஈராக் நாட்டை விட்டு வெளியேறியது அமெரிக்கா!
ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது. இனி அமெரிக்கா உடனான உறவு, நேரடி ராணுவ தலையீடாக இல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் அறிவிப்பு. கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்.சி.பி
மகளிர் ப்ரீமியர் லீக்: நடப்பு சீசனில் முதல் அணியாக PLAYOFFS சுற்றுக்குத் தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி வருகிறது ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணி























