மேலும் அறிய

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர் பேட்டி

சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. 

லாக்கப் மரணம்:

நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில் அஜித்குமார் மீது போலீசார் பைப்களை வைத்து சரமாரியாக அடித்த வீடியோ சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும், ஆவணங்களும் நீதிபதிகளையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

விசாரணையில் நடந்தது என்ன?

இந்த நிலையில், அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன்குமார் அன்று என்ன நடந்தது? என்பதை தனியார் வார இதழுக்கு பேட்டியாக அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் எங்களை வளத்தாங்க. அஜித் மடப்புரம் கோயிலுக்கு செக்யூரிட்டி வேலைக்கு கொஞ்ச நாளாதான் போயிகிட்டு இருந்தான். 

அஜித்தையும், என்னையும், காரை பார்க்கிங் செய்தவரையும் பல இடங்களுக்கு கூப்பிட்டு போயி கண்டபடி போலீஸ் எங்களை அடிச்சாங்க. எங்களுக்கும், இந்த திருட்டுச் சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நாங்கள் கதறியும் அவங்க விடாம எங்களை அடிச்சாங்க. 

தண்ணி கூட கொடுக்கல:

அப்புறம் என்னை மட்டும் விட்டுட்டாங்க. அஜித்துக்க தண்ணி கூட கொடுக்காம கண்டபடி போலீஸ் அவனை அடிச்சாங்க. அவனுக்கு எந்த நோயும் இல்ல. அஜித் வலி தாங்க முடியாமல்தான் உயிரிழந்திருக்கான். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

என்று கண்ணீர்மல்க பேட்டி அளித்துள்ளார். 

போலீசார் கைது:

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ள இந்த காவல்நிலைய மரணத்தில் தொடர்புடைய போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். டிஎஸ்பி சண்முக சுந்தரமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பிறப்புறுப்பில் மிளகாய் பொடி:

அஜித்குமாரை போலீசார் விசாரணையின்போது அவரை செருப்பு காலால் எட்டி, உதைத்தும், அவருக்கு தண்ணீர் கொடுக்காமல் அவரது வாய், காது மட்டுமின்றி பிறப்பு உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி விசாரணை என்ற பெயரில் சித்ரவரதை செய்துள்ளனர். இந்த வழக்கி்ல தவறு செய்த போலீசாருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வழக்கில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget