மேலும் அறிய

ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர்; வெட்டிச் சாய்த்த கும்பலுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கை இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மூன்று நபர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் தப்பிக்க முயற்சித்த போது விபத்து ஏற்பட்டு கால் முறிந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர் குற்றச் சம்பவங்கள் சிவகங்கையில்

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் என குறிப்பிட்ட சில இடங்களில் அதிகளவு குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக சாதிரீதியான மோதல், பழிக்குப் பழி, கள்ளத்தொடர்பான மோதல், போதைப் பொருட்கள் பயன்பாடு என பல்வேறு சட்ட விரோத செயல் நடைபெறுகிறது. காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பட்டா கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டல்விடுத்து வீடியோ வெளியிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கொலை குற்றம் தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?

விபத்தில் கால் முறிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசையை சேர்ந்த இளைஞர் பிரவீனை, கடந்த சில நாட்களுக்கு முன் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதனை அடுத்து  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மானாமதுரை காவல் நிலைய போலீசார் சங்கமங்களத்தை சேர்ந்த சசிகுமார், தனுஷ், சுதர்சன்,  ரகுபதி, மற்றும் கிளங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அமர்நாத் ஆகிய ஐந்து பேரை கைது செய்யும் முயற்சியில்  ஈடுபட்டனர். அப்போது சசிகுமார் உட்பட மேலும் இரண்டு பேர் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..

குற்றங்களை குறைக்க ஆலோசனை நடத்த வேண்டும்

இதுகுறித்து சிவகங்கை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறுகையில்...,” சமீபத்தில் நடைபெற்ற கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனாலும் சிவகங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்கிறது. இதனை காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை கொண்டு தடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் குற்ற சம்பவங்கள் ஓரளவு குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அதே போல் மாவட்ட நிர்வாகம் சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். வேலையின்மை காரணமும் குற்ற சம்பவம் அதிகரிப்பதற்கான முக்கிய  காரணமாக அமைக்கிறது. தொடர்ந்து காவல்துறையினர் கூட்டம் நடத்தி ஆலோசனைகள் அடிப்படையில் செயல்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

 

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
சிவகங்கை கொல்லங்குடியில் 170 பேருக்கு ரூ.36.72 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
சிவகங்கை கொல்லங்குடியில் 170 பேருக்கு ரூ.36.72 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget