மேலும் அறிய
சிவகங்கை: சரித்திரப் பதிவேடு குற்றவாளி ரஜினி கழுத்தறுத்து கொலை; உறவினர்கள் மறியல்!
சிவகங்கையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கழுத்தறுத்து கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்.

சாலை மறியல்
Source : whatsapp
குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம்; இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியான ரஜினி என்பவர் கழுத்தறுத்து கொலை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலையில் அண்ணாமலை நகர் வட்டஊரணி பைபாஸ் அருகே உள்ள ஆர்.எஸ்.பதி காடு பின்பகுதியில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரஜினி என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ரஜினி (40), சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இவர் மீது திருப்பாசத்தி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன . இவர் நெய் வியாபாரம் செய்து வந்த நிலையில், சிவகங்கை வாணியங்குடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துவுள்ளர்.
மர்ம நபர்களால் ரஜினி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் ரஜினி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவகங்கை நகர் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ரஜினியின் உறவினர்கள் மானாமதுரை – சிவகங்கை சாலையில் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம்; இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















