மேலும் அறிய

Sengottai Madurai Train: செங்கோட்டை - மதுரை ரயில் சேவை.. போடி வரையில் நீட்டிக்கப்படுமா..?

Sengottai Madurai Train Service: வழக்கம் போல் 7:25 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வகையில் தண்டவாளம் நீட்டிப்பு செய்து இயக்கினால், தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கேரளாவில் விளைந்த ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை வியாபார தேவைக்காக தமிழகம் கொண்டுவர போடி - மதுரை இடையிலான ரயில் போக்குவரத்தை மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து இயங்கி வந்த சேவை கடந்த 2010 ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. போடி, தேனி, ஆண்டிபட்டி, மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி வழியாக இயங்கி வந்ததால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 


Sengottai Madurai Train: செங்கோட்டை - மதுரை ரயில் சேவை.. போடி வரையில் நீட்டிக்கப்படுமா..?

இதையடுத்து, மத்திய அரசு இந்த அகலப்படுத்தும் பணிக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் விரைவு படுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2ம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மற்றும் தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை  பிரதமர்  நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  

இந்த நிலையில் தற்போது செங்கோட்டையிலிருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு செல்லும் ரயிலை தேனி மாவட்டம் போடி வரை நீட்டிக்க வேண்டுமென நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி , விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்ட மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.மதுரை, போடி ரயில்வே வழித்தடம் அகல ரயில் பாதையாக ஆக்கப்பட்டு இந்த வழித்தடத்தில் தற்போது மதுரையிலிருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி சென்று திரும்பும் வகையில் பயணிகள் ரயில் சேவை இயங்கி வருகிறது.

மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து போடிக்கு ஒரு ரயில் இயங்கி வருகிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி ,விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள். தேனி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் மூணாறு, குமுளி போன்ற கேரள நகரங்களிலும் வசித்து வருகின்றனர். இதனால் போடியில் இருந்து தங்கள் மாவட்ட நகரங்களுக்கு ரயில் சேவை எதிர்பார்க்கின்றனர். 


Sengottai Madurai Train: செங்கோட்டை - மதுரை ரயில் சேவை.. போடி வரையில் நீட்டிக்கப்படுமா..?

இந்த நிலையில் செங்கோட்டையில் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை செல்லும் ரயிலை, அங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு போடியை சென்றடையும் வகையிலும் மறு மார்க்கத்தில் அதிகாலை 5 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு ஏழு மணிக்கு மதுரை வந்து வழக்கம் போல் 7:25 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வகையில் தண்டவாளம் நீட்டிப்பு செய்து இயக்கினால், தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

மதுரைக்கு மாலை 4:15 மணிக்கு வரும் திருச்செந்தூர் , பாலக்காடு மாலை 4:45 மணிக்கு வரும் திருவனந்தபுரம் திருச்சியில் இருக்கும் இணைப்பு ரயிலாகவும் இந்த ரயில் விளங்கும். திருவனந்தபுரம், நாகர்கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயனடைவார்கள். எனவே, செங்கோட்டை, மதுரை ரயில் போடி வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  இதற்கு மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget