பிரமாண கடப்பாரையை வைத்து திராவிடத்தை ஒழிப்பேன் என பேசுகிறார் சீமான்.. நா.த.க.,வுக்கு எதிராக கடும் எச்சரிக்கை!
என் வீடு நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியும் ஆனா என்னிடம் பேச வரமாட்டாங்க - கொந்தளித்த இளைஞர்.

பிரமாண கடப்பாரையை வைத்து திராவிடத்தை ஒழிப்பேன் என பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சியை நாயக்கர் ,ரெட்டியார் என்ற கடப்பாரையால் அடுச்சு உடைப்பேன் , திராவிடம் என்ற பெயரில் தினசரி தெலுங்கர்களை மட்டுமே எதிர்க்கிறார் சீமான் என சீமானுக்கு நேரடி மிரட்டல் விடுத்த நாயுடு நாயக்கர் இளைஞர் அமைப்பு தலைவர்*
திருமலை நாயக்கரின் 443 வது பிறந்தநாள் விழா
மன்னர் திருமலை நாயக்கரின் 443 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மஹாலில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பேசிய நாயுடு நாயக்கர் இளைஞர் அமைப்பு தலைவர் பாரத் : பாலியல் குற்றவாளி சீமான், செத்துபோன கொள்கை தமிழ்தேசியம் போலி தமிழ்தேசியம், இந்தியாவில் தமிழ்தேசியம் என்ற பெயரில் பேசி தமிழகத்தில் உள்ள மொழி சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையிலும், நாயக்கர் இன பெண்களை விஜயநகர பேரரசுகள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரை இழிவாக பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சியை வேரடி மண்ணோடி அழிப்பேன், என் வீட்டு பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுப்போம், கடவுளாக இருந்தாலும் யாருக்கும் அஞ்சாமாட்டோம்.
போலி தமிழ்தேசம் பேசுறவங்கள எதிர்க்கிறோம்
பிரமாண கடப்பாரையை வைத்து திராவிடத்தை ஒழிப்பேன் என பேசுகிறார் சீமான், நாயக்கர் ,ரெட்டியார் என்ற கடப்பாரையால் நாம் தமிழர் கட்சியை அடுச்சு உடைப்பேன், திராவிடம் என்ற பெயரில் தினசரி தெலுங்கர்களை மட்டுமே எதிர்க்கிறார். நாம் தமிழர் என்ற பர்னிச்சர் உடைக்கப்பட்டது. தினசரி உடைப்போம், என் வீடு நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியும் ஆனா என்னிடம் பேச வரமாட்டாங்க. நான் தமிழ் தேசியத்த எதிர்க்கல ஆனா போலி தமிழ்தேசம் பேசுறவங்கள எதிர்க்கிறோம் என திடிரென மேடையில் பேசி முடித்தார்.























