மேலும் அறிய

3வது நாளாக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மூன்றாவது நாளாக இன்று மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது. டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


3வது நாளாக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள்  அனுப்பிவைப்பு

இதற்கிடையே பாதிப்பு காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. இந்த நிலையில், மீட்புப் பணிக்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மூன்றாவது நாளாக இன்று மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.


3வது நாளாக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள்  அனுப்பிவைப்பு

கடந்த மூன்று நாட்களில்  394.20 டன்(3,94,200 கிலோ) அளவில் நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மற்றும் சரக்கு வாகனம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களுக்கு மூன்றாவது நாளான இன்று (21.12.23) காலை 7:30 மணிக்கு மத்திய தொழிலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை, வருவாய்த்துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டரில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை முதன்மைச் செயலர் அமுதா ஐ.ஏ.எஸ்., சென்னையில் இருந்து ஒருங்கிணைப்பு செய்து வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா தலைமையில் திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கடலூா், திருப்பூா் மாவட்ட நிா்வாகங்கள் அனுப்பிவைத்த குடிநீா் புட்டிகள், ரொட்டி, பால் பவுடா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டு, பொட்டலமிடப்பட்டு அனுப்பப்பட்டுவருகிறது.


3வது நாளாக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள்  அனுப்பிவைப்பு

வருவாய்த் துறை, மாநகராட்சி, ஊரக வளா்ச்சி ஊராட்சித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் பணியாளா்கள் 300 போ் சுழற்சி முறையில் இந்தப் பணிகளை மேற்கொண்டனா். கடந்த 18ஆம் தேதி முதல் நேற்று 20 ஆம் வரை மூன்று நாட்களில் 394.20 டன்(3,94,200 கிலோ) அளவில் நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மற்றும் சரக்கு வாகனம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 1,69,838 பிஸ்கட் பாக்கெட்டுகள், 28,804 பிரட் பாக்கெட்டுகள், 1,03,503 குடிநீர் பாட்டில்கள் (ஒரு லிட்டர் பாட்டில் 65,598, 500 மி.லி பாட்டில் 19,731, 300 மிலி பாட்டில் 18,174), 73 கிலோ பால் பவுடர், 22,101 ரஸ்க் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கும். இதுதவிர அரிசி, கோதுமை மாவு, பெட்ஷீட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள், நாப்கின்கள், கொசு வலைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Embed widget