மேலும் அறிய

போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரையில் காவல்துறை அதிகாரி வீட்டில் நகையும், பணத்தையும் கொள்ளையடித்துத்தார்கள் என்று சொன்னால் சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு எங்கே இருக்கிறது - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார் பேட்டி
 
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், “தி.மு.க., மக்களை கரும்புச்சாறு பிழிவதை போன்று கசக்கி எடுத்து சக்கையாக அரசு தூக்கி எரிகிறது. நாடு பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல வறட்சி, கோடை மழை என்று ஒரு புறத்தில் தண்ணீர் பற்றாக்குறை, ஒரு புறத்திலே இன்னைக்கு கோடை மழை எதிர் கொள்ள வேண்டிய இந்த நிர்வாகத்தை மேற்கொண்டு அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியவர்கள் இன்னைக்கு நாடு கடந்து கடல் கடந்து, அவர்கள் செல்வதை பார்க்கிறபோது இந்த மக்கள் மீது அவர்கள் வைத்திருக்கிற அக்கறையின் அளவு நமக்குத் தெரிகிறது. கடலை தாண்டி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளவர்கள் மக்கள் மீது எப்படி அக்கறை கொண்டு இருப்பார்கள் என்பது இதுவே சாட்சி.  இந்த நாட்டு மக்களுக்காக, இந்த தமிழ் மண்ணுக்காக  இன்றைக்கு ஒவ்வொரு நாளும் உரிமை குரலாக எடப்பாடியார் எடுத்து வைக்கின்ற அந்த வாதங்களை, அந்த கண்டனங்களை, அந்த கோரிக்கைகளை  எல்லாம் ஊடகங்கள் உலகத்திற்கு எடுத்துச் சென்றால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஒரு புது வாழ்வைப் பெற்றுத் தர, நல்வாழ்வை பெற்றுத்தர நம்பிக்கை மக்களிடத்தில் பிறக்கும்.

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை

இன்னைக்கு இந்தியாவிலேயே தமிழகம் கடன் வாங்குவதிலே முதலிடம், தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதுபான விலையில் கொள்ளை அடிப்பதிலேயே தமிழகம் முதலிடம். தொழில்துறையில் முதலிடம், வளர்ச்சியில் முதலிடம், என்ற நிலை மாறி இன்றைக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதுரையில் காவல்துறை அதிகாரி இல்லத்திலேயே நகையும் பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள் கோடிக்கு மேல சேர்த்து வைத்த பணத்தை காவல்துறை அதிகாரியே இன்றைக்கு பறிகொடுத்து இருக்கிறார் என்று சொன்னால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு எங்கே இருக்கிறது. எங்கும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது போதை பொருள் கடத்தாத நாள் இல்லை போதை பொருள் நாடாக மாறிவிட்டது. இன்றைக்கு தலைமைச் செயலாளரே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க ஒரு ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிற ஒரு நிலையை நாம் பார்க்கிறபோது கண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழி இல்லை.
 
காவல்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தை நடத்தி அதில் தோல்வி அடைந்து எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் என்பதை இன்றைக்கு உளவுத்துறை மூலமாக உண்மை செய்தியை தெரிந்து கொண்டு  தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு இருக்கிற இந்த நேரத்தில் தலைமைச் செயலாளர் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க ஆய்வு கூட்டம் நடத்துவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது இப்போது நாம் இதை நினைத்து கவலைப்படுவதா? கண்ணீர் வடிப்பதா?ஆகவே மக்களின் நம்பிக்கை சிதைத்து இருக்கிற இந்த மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்கு தமிழகத்தில் இருந்து விலகுகிறதோ அன்றைக்கு தான் இந்த தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என்பதை இந்த நாட்டு மக்கள் நம்புகிறார்கள். அதற்கு காலம் கனிந்து வர இருக்கிறது ஆகவே புரட்சித்தமிழர் எடப்பாடியார் 70-வது பிறந்த தினவிழாவில் ஊன், உறக்கம் பார்க்காமல் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய சபதம் ஏற்போம்” என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget