மேலும் அறிய

’மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று’- கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்...!

’’இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடல் பகுதி சுமார் 500 மீட்டருக்கும் மேலாக உள்வாங்கியது. இதனால் அப்பகுதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய நாட்டுப்படகுகள் தரைதட்டியது’’

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ முதல் 55 கி.மீ வரை சூறைக்காற்று வீசி வருவதின் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியான பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோர பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பந்தல்கள் காற்றில் பறக்கின்றன.


’மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று’- கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்...!

தென்னை மரங்கள், வாழை மரங்கள் இந்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வளைந்து அங்கும், இங்குமாக அசைந்து ஆடுகிறது. சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றின் வேகம் இருக்கிறது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிசோடி காணப்படுகிறது. வாகனங்களும் அந்த பகுதிகளில் மெதுவாக சென்று வருகிறது. வாகன ஓட்டிகள் ஏதாவது ஆகி விடுமோ? என ஒருவித பயத்துடனேயே தங்களுடைய வாகனத்தை இயக்கி வருகின்றனர்.  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்:



’மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று’- கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்...!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில்,  ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்று 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் வீசியதால் ராமேஸ்வரம்  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனால் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல்   தங்களது படகுகளை பாதுகாப்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி உள்ளனர்.


’மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று’- கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்...!

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடல் பகுதி சுமார் 500 மீட்டருக்கும் மேலாக உள்வாங்கியது. இதனால் அப்பகுதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய நாட்டுப்படகுகள் தரைதட்டியது. மேலும் சில படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது. தரைதட்டிய நாட்டு படகுகளை மீனவர்கள் மீட்டு கடலில் ஆழமான பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் கடல் உள்வாங்கியதால் கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன், கடல் அட்டை உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகின்றன. இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ராமேஸ்வரத்தில் தூண்டில் வளைவுகளுடன் கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget