மேலும் அறிய

காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்துக்கு அனுமதி - முதல்வர் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காவல்துறை மற்றும் காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்தை அனுமதித்து வருகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு.

தெலுங்கானாவில் யாரும் மதிக்காததால் புதுச்சேரியில் தங்கி முதல்-அமைச்சராக செயல்படுகிறார் தமிழிசை சவுந்தரராஜன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டார். தொடர்ந்து போகர் சன்னதியில் தியானம் செய்தார். பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ”கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்துக்கு அனுமதி -  முதல்வர் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி ஏற்றம், வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பா.ஜ.க.வை தூக்கி எறிந்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் நலனுக்காக பல்வேறு வாக்குறுதிகள் கூறி பிரசாரம் செய்தோம். அதனால் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பல இடங்களில் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது ஊழலை ஒழிப்போம் என்றார். உண்மையில் இவர்கள் ஆட்சியில்தான் பல ஊழல்கள் நடைபெற்று உள்ளன. குறிப்பாக அதானிக்கு மோடி உதவியதன் மூலமே அவர் பல லட்சம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தால், ராகுல்காந்தியின் பதவியை பறித்து வெளியே அனுப்பி உள்ளனர்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வருத்தத்துக்கு உரியது. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அளித்துள்ளார். மேலும் சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் இந்த கள்ளச்சாராயம் தமிழகத்துக்கு புதுச்சேரியில் இருந்துதான் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது மட்டுமல்ல கடந்த 1 1/2 ஆண்டுகளாக புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது.


காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்துக்கு அனுமதி -  முதல்வர் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

ஆனால் இதுபற்றி புதுச்சேரி முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது ஆட்சி காலத்தில் 400 மது விற்பனை நிலையங்கள் இருந்தன. தற்போது 900 விற்பனை நிலையங்களாக உயர்ந்துவிட்டது. அதாவது குடித்துவிட்டு கும்மாளம் ஆடுகின்ற களமாக புதுச்சேரி மாநிலம் மாறியுள்ளது. 24 மணி நேரம் மதுக்கடைகள் திறந்துள்ளதால் கலாச்சாரம் சீரழிந்து உள்ளது. எனவே பள்ளி, கோவில், குடியிருப்பு அருகே உள்ள மது விற்பனை நிலையங்களை அகற்ற வேண்டும் என தொடர் போராடி  வருகிறோம். புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவதால் தமிழக மக்கள் உயிரிழப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது.

ஆனால், புதுச்சேரி கலால்துறை அமைச்சர் இதை வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளார். மேலும் கலால்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கலால்துறையில் பெரும் ஊழல் நடந்து வருகிறது. இங்கு கலால்துறை மூலம் முதல்வருக்கு கப்பம் கட்டுகிறார்கள். எனவே இதற்கு முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியது என்பது அவர்களின் குடும்ப பாதுகாப்புக்காக கொடுத்தது.


காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்துக்கு அனுமதி -  முதல்வர் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் துணைநிலை கவர்னராக செயல்படவில்லை, முதல்-அமைச்சராக செயல்படுகிறார். அவர், முதல்-அமைச்சரின் அதிகாரத்தை கையில் எடுத்து புதுச்சேரியில் தங்கி உள்ளார். இவர் தெலுங்கானாவுக்கு செல்வதில்லை. காரணம் அங்குள்ள அதிகாரிகள் யாரும் அவரை மதிப்பதில்லை. ஆனால் புதுச்சேரியில் ஏமாளி முதல்-மந்திரி, தலையாட்டியாக உள்ளதால் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறார்” என்று  பேசினார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget