மேலும் அறிய

கஞ்சா விற்றால் சொத்துக்கள் முடக்கம் - தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இனி கஞ்சா கடத்தினாலோ அல்லது கஞ்சா வழக்கில் தொடர்ந்து கைதானாலோ இனி சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை..!

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் குடும்ப சொத்துக்கள் முடக்கப்படும் என தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச் செயலை தடுப்பதற்காக தேனி மாவட்டத்தில் 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகிறது.


கஞ்சா விற்றால் சொத்துக்கள் முடக்கம் - தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

 

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 4 போலீசார் உட்பட 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநரின் "கஞ்சாவேட்டை 2.0" உத்தரவினை தொடர்ந்து, தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த கடந்த மாதம் 19ஆம் தேதி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பூபாலன், முரளிதரன், விஜயன், அருண் பாண்டி, ஓடைபட்டியை சேர்ந்த சரத், நாராயண தேவன் பட்டியைச் சேர்ந்த கணேசன் ஆகியோர்களிடமிருந்து 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கஞ்சா விற்பனை செய்த அனைவரும் கைது செய்யப்பட்டு ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 52/2022 பிரிவு 8( C r/w 20(b}{(i)(C) 29 (1) &25 NDPS act -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கஞ்சா விற்றால் சொத்துக்கள் முடக்கம் - தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

 

தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்கின் அறிவுறுத்தலின் படியும், திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர் ரூபேஷ்குமார் மீனா வழிகாட்டுதலின் படியும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் மேற்பார்வையில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் 5 தனிப்படைகளின் உதவியுடன் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்யும் உறவினர்கள் ஆகியோர்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.


கஞ்சா விற்றால் சொத்துக்கள் முடக்கம் - தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

 

அதன் அடிப்படையில் கஞ்சா கடத்தலுக்கு தேவைப்படும் பணபரிவர்த்தனை செய்ய பயன்படுத்திய நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுடைய 9 வங்கி கணக்குகளை அடையாளம் கண்டு அவ் வங்கிகணக்குகளை சட்டப்படி முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கும் கஞ்சா தொழிலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இத்தொழிலில் ஈடுபடும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில் துவங்கியுள்ள ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில், கஞ்சா கடத்துவர் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது குறித்த தகவல்களை போலீசாருக்கு அளிக்கும் நபர்களுக்கு தகுந்த பரிசு, சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget