பாம்பன் பாலம் வேலை 100% முடிந்தது.. திறப்பு விழா நடத்த தயக்கம் ஏன்?
பாம்பன் பாலம் திறப்பு விழாவை உலக தரத்திற்கு நடத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய நபர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை திறப்பு விழா குறித்த தேதி உறுதியாகவில்லை.
புதிய பாம்பன் ரயில் பாலம்
ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே ரூ. 550 கோடி செலவில் 2.05 கிலோமீட்டர் நீளமுள்ள, புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலைக் வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது. இது பழைய பாலத்தில் கடக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, 25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்து, பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, திறப்பு விழாவிற்கே தயாராகி விட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி புதிய பாலத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி, பாதுகாப்பு குறித்த யோசனைகளையும் வழங்கினார். இதனால் சரி செய்ய கால தாமதம் ஏற்பட்டு பாலம் திறப்பு குறித்த தேதி தள்ளிப் போனது.
கிடப்பில் போடப்பட்ட பாம்பன் பாலம் திறப்பு
டிசம்பர் மாதத்தில் இறுதிக்குள் குறைகள் சரி செய்யப்பட்டு 100% பாலத்தின் பணியானது நிறைவடைந்தது. புதிய பாலம் பாதுகாப்பாக உள்ளது, உறுதி சோதனையிலும் வெற்றியடைந்துவிட்டது என பொறியாளர்கள் தெரிவித்தனர். இதன்பின் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்து மார்ச் இறுதியில் திறப்பு விழா நடக்கும் என தெரிவித்தார். ஆனால் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யாமல் ரயில்வே அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் புதிய ரயில் பாலம் 3 மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
சிரமத்திற்கு ஆளாகும் பயணிகள்
திறப்பு விழா தாமதம்
பாலம் திறப்பு தாமதம் ஏன்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

