மேலும் அறிய

பாம்பன் பாலம் வேலை 100% முடிந்தது.. திறப்பு விழா நடத்த தயக்கம் ஏன்?

பாம்பன் பாலம் திறப்பு விழாவை உலக தரத்திற்கு நடத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய நபர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை திறப்பு விழா குறித்த தேதி உறுதியாகவில்லை.

புதிய பாம்பன் ரயில் பாலம்

ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே ரூ. 550 கோடி செலவில் 2.05 கிலோமீட்டர் நீளமுள்ள, புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலைக் வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது. இது பழைய பாலத்தில் கடக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, 25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்து, பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, திறப்பு விழாவிற்கே தயாராகி விட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி புதிய பாலத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி, பாதுகாப்பு குறித்த யோசனைகளையும் வழங்கினார். இதனால் சரி செய்ய கால தாமதம் ஏற்பட்டு பாலம் திறப்பு குறித்த தேதி தள்ளிப் போனது.

கிடப்பில் போடப்பட்ட பாம்பன் பாலம் திறப்பு

டிசம்பர் மாதத்தில் இறுதிக்குள் குறைகள் சரி செய்யப்பட்டு 100% பாலத்தின் பணியானது நிறைவடைந்தது. புதிய பாலம் பாதுகாப்பாக உள்ளது, உறுதி சோதனையிலும் வெற்றியடைந்துவிட்டது என பொறியாளர்கள் தெரிவித்தனர். இதன்பின் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்து மார்ச் இறுதியில் திறப்பு விழா நடக்கும் என தெரிவித்தார். ஆனால் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யாமல் ரயில்வே அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் புதிய ரயில் பாலம் 3 மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.

சிரமத்திற்கு ஆளாகும் பயணிகள்

தமிழகம் உள்ள வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் வரும் பக்தர்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தனியார் வாகனத்தில் ராமேஸ்வரம் வருகின்றனர். பெண்கள், முதியோர், குழந்தைகளுடன் வருபவர்கள் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. தனியார் வாகனங்களும் சமயத்தை பயன்படுத்தி ரூபாய்1000 முதல் ரூ.2500 வரை வாடகை கொடுக்க வேண்டிய கஷ்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பாம்பன் புதிய ரயில் பாலத்தை விரைவில் திறந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 

திறப்பு விழா தாமதம்

 
புதிய பாலத்தின் கட்டுமானத்தில் எஃகு வலுவூட்டல், கூட்டு ஸ்லீப்பர்கள் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஓவிய அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2019 நவம்பரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார், மேலும் 2020 பிப்ரவரியில் RVNL இன் கீழ் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் இது டிசம்பர் 2021 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மார்ச் முதல் வாரம் அல்லது இறுதியில் திறக்கப்படும் என தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய நபர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை திறப்பு விழா குறித்த தேதி உறுதியாகவில்லை.
 

பாலம் திறப்பு தாமதம் ஏன்?

 
புதிய பாம்பன் பாலம் ஆசியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என போற்றப்படுகிறது. எனவே இதனை மிகப்பெரும் கனவு திட்டமாக மத்திய அரசு கருதுகிறது. இதற்காக திறப்புவிழாவை உலக தரத்திற்கு நடத்த வேண்டும். உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வகையில் மீடியாக்கள் மூலம் வெளிக் கொண்டுவர வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழு நிகழ்ச்சிக்கு அதிகளவு செலவு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு என்பதால் இதற்கான செலவு தொகை ஒதுக்குவதில் சிரமம் ஏற்படுவதாக முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget