பழனி தைப்பூச திருவிழா: முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், தேரோட்டம்! பக்தர்கள் பரவசம்!
பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ”அரோகரா அரோகரா” என்ற கோசமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகி அம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, பழனி மலைக் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.பழனி தைப்பூசத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை கழுத்தில் மங்களநாணை சூட்டினார். தொடர்ந்து தம்பதி சமேதராக மணக்கோலத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக வெள்ளித்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் துவங்கிய தேரோட்டம் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். வள்ளி, தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அரசு அதிகாரிகள், பழனிநகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகிற பிப்ரவரி 4ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்திருவிழாவிற்காக நேற்று சனிக்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தா்கள் குவிந்தனா். இந்த முறை சிறப்பு ஏற்பாடாக பக்தா்களுக்காக கிரிவீதியில் மேற்கூரைகள், தடுப்புகள், குடிநீா் வசதிகள் செய்யப்பட்டன. அழகுநாச்சியம்மன் கோயில் முன் தொடங்கிய பக்தா்களின் வரிசை குடமுழுக்கு நினைவரங்கு வரை நீண்டிருந்தது. பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுமாா் 20 அடி நீள சூலாயுதத்தை அலகு குத்தி வந்தார் முருக பக்தா். சுமாா் 8 இடங்களில் அவசரக் கதவுகள் அமைக்கப்பட்டன. பாத யாத்திரை பக்தா்கள் மயில், பால் காவடிகளை எடுத்து ஆடிப்பாடி வந்தனா். பக்தா்கள் பலா் 10 அடி முதல் 20 அடி வரையில் அலகுகள் குத்தி கிரிவலம் வந்து மலையேறினா். பாதவிநாயகா் கோயில் முதல் அழகுநாச்சியம்மன் கோயில் வரை 5 வழிகளில் பக்தா்கள் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, பழனிக்கு வரும் பேருந்துகள் நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், பக்தா்கள் நகருக்குள் வந்து செல்ல வசதியாக கோயில் சாா்பில் ஏராளமான இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் பக்தா்கள் அடிவாரம், கொடைக்கானல் சாலை, இடும்பன் கோயில், சிவகிரிப்பட்டி, பழனியாண்டவா் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொண்டனா். பல்வேறு இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து பக்தா்களுக்கு போலீஸாா் வழிகாட்டி வருகின்றனா். தவிர, பக்தா்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்ட கியூஆா் கோடுடன் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் மலையேறும் இடத்தில் மோப்ப நாய்களுடன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















