மேலும் அறிய

அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

உலக முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பழனியில் நடைபெறவிருக்கிற உலக முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும், மாநாட்டிற்கான செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அடுத்த மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டிற்கு ஏராளமான முருக பக்தர்கள், ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள், தமிழ் அறிஞர்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. திருக்கோவிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.


அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழனிக்கு வருகை தந்தார். அதிகாலையில் பழனி மலை கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு, மாநாட்டிற்கு செய்யப்படும் ஏற்பாடுகள் மற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது,  பழனியில் நடைபெறவுள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும், மாநாட்டிற்கான செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும்,


அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

மாநாட்டில் பிரதானமாக எட்டு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு அதில் அறுபடை வீடு முருகன் மற்றும் மருதமலை முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் சிறப்பு அலங்கார வளைவுகள்,  முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் திரையரங்கு, வி.ஆர் தொழில்நுட்பத் திரையரங்கு, அறுபடை வீடுகளின் முருகன் திருக்கோவில்களின் தத்ரூபமாக அமைக்கப்பட்ட முருகன் சிலைகள், 12 சித்தர் சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. ஐந்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டு பந்தல் உணவு பந்தல் கழிப்பார்கள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் போது உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும்,  மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது குறித்து அவரிடம் கேட்டு முடிவு செய்யப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பழனி திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, காவல்துறை மாவட்ட எஸ்பி பிரதீப் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

மதுரையில் பிரபல யூட்யூபர் மாரிதாஸ் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் !
மதுரையில் பிரபல யூட்யூபர் மாரிதாஸ் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் !
அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை.. (09.06.26) முழு லிஸ்ட் இது தான் !
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை.. (09.06.26) முழு லிஸ்ட் இது தான் !
கோயில் முறைகேடுகள் குறித்து அதிரடி எச்சரிக்கை: யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி - அமைச்சர் ரமேஷ்
கோயில் முறைகேடுகள் குறித்து அதிரடி எச்சரிக்கை: யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி - அமைச்சர் ரமேஷ்

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget