மேலும் அறிய

மீண்டும் நிபா வைரஸ்: அச்சம் தரும் அறிகுறிகள்! 383 பேர் கண்காணிப்பில், தடுப்பூசி இல்லையா?

கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்த 383 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெண் ஒருவர் உயிரிழந்தும் இருக்கிறார். இதையடுத்து அங்குக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 383 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர்.


மீண்டும் நிபா வைரஸ்: அச்சம் தரும் அறிகுறிகள்! 383 பேர் கண்காணிப்பில், தடுப்பூசி இல்லையா?

தற்போதிருக்க கூடிய காலகட்டத்தில் திடீர் திடீரெனப் புதிய வகை வைரஸ்கள் பரவி வருகிறது. சிலநேரம் அவை கொரோனாவை போல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் புதிய நோய்ப் பாதிப்புகளை நாம் கவனமாகக் கண்காணிக்க வேண்டியது இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே நாம் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்போது நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்த 383 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், தீவிரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கேரளச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களின் தொடர்பில் இருந்த 383 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் மலப்புரம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும், நான்கு பேர் பாலக்காடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவதுறை சார்பில் கூறப்படுகிறது. சமீபத்தில் மலப்புரம் மாவட்டத்தில் 18 வயது பெண் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். பாலக்காடு மாவட்டம் தச்சணாட்டுக்கரை பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.


மீண்டும் நிபா வைரஸ்: அச்சம் தரும் அறிகுறிகள்! 383 பேர் கண்காணிப்பில், தடுப்பூசி இல்லையா?

வீடு வீடாகச் சென்று காய்ச்சல் குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், இரண்டு மாவட்டங்களிலும் தீவிரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இது முதல்முறை இல்லை. அவ்வப்போது அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முதன்முதலில் 2018ஆம் ஆண்டில் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிறகு 2019, 2021, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளிலும் நிபா பாதிப்பு பதிவாகியுள்ளது.

நிபா வைரஸ் தொற்று ஏற்படும்போது காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப் புண் ஆகியவை முக்கியமான அறிகுறிகளாக உள்ளன. சிலருக்கு மயக்கம், தூக்கமின்மை மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். சில நேரங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகள், நிமோனியா, வலிப்பு, கோமா மற்றும் உயிரிழப்பு கூட நிகழலாம். இந்த வைரஸ் உடலில் பரவி 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். தற்போது நிபா வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
சிவகங்கை கொல்லங்குடியில் 170 பேருக்கு ரூ.36.72 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
சிவகங்கை கொல்லங்குடியில் 170 பேருக்கு ரூ.36.72 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
Embed widget