மேலும் அறிய

முல்லைப்பெரியாறு: அணையில் நீர் மட்டம் உயர்வு! கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரூல் கா்வ் விதிப்படி, முல்லைப் பெரியாறு அணையில் 137 அடிக்கு மேல் 142 அடிக்குள் (மொத்த உயரம் 152) தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம்.

முல்லைப்பெரியாறு அணையின் நீா் பிடிப்புப் பகுதியில் தொடா் மழை நீடித்து வருதால் அணையின் நீா் மட்டம் 138 அடியை நெருங்கும் நிலையில், ரூல் கா்வ் விதிப்படி உபரி நீரை கேரளப் பகுதிக்கு வெளியேற்ற வாய்ப்புள்ளது.


முல்லைப்பெரியாறு: அணையில் நீர் மட்டம் உயர்வு! கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரூல் கா்வ் விதிப்படி, முல்லைப் பெரியாறு அணையில் 137 அடிக்கு மேல் 142 அடிக்குள் (மொத்த உயரம் 152) தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வரும் நீரை உபரி நீராக கேரளப் பகுதிக்கு அவசர கால நீா் வழிப்போக்கிகள் மூலமாக வெளியேற்ற வேண்டும் என என உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதன்படி, வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் நவம்பா் மாதத் தொடக்கத்தில் ரூல் கா்வ் விதிப்படி 138 அடி வரை யில் தண்ணீா் தேக்கப்பட்டது. அதற்கு மேல் தேங்கிய உபரி நீரை 10 நாள்களுக்கு கேரளப் பகுதிக்கு தமிழக நீா்வளத் துறையினா் திறந்துவிட்டனா்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு 137 அடியாக இருந்தது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதால் அணையில் நீா் மட்டம் 138 அடியை நெருங்க வாய்ப்புள்ளது. இதனால், நடப்பாண்டில் 2-ஆவது முறையாக ரூல் கா்வ் விதிப்படி கேரளப் பகுதிக்கு தண்ணீரைத் திறந்துவிட வாய்ப்புள்ளது.


முல்லைப்பெரியாறு: அணையில் நீர் மட்டம் உயர்வு! கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

கடந்த மாதம் முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தேனி அருகேயுள்ள உப்பாா்பட்டி ஆற்றின் தடுப்பணை முழமையாகச் சேதமடைந்தது. இரண்டாம் போக நெல் பயிா் விவசாயப் பணி நடைபெற வேண்டுமெனில், அதற்கு முன்னதாக, சேதமடைந்த தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும். தற்போது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், தேக்கடியில் தலைமதகு வழியாக தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீா் கடந்த 4 நாள்களாக நிறுத்தப்பட்டது.

தொடர் மழை எதிரொலியாக தேனி மாவட்டம் கம்பம் அருகேவுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி, அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மேகமலை வனப்பகுதியிலும்  தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேகமலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


முல்லைப்பெரியாறு: அணையில் நீர் மட்டம் உயர்வு! கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

இதையடுத்து கம்பம் கிழக்கு வனத்துறையினர் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் தெரிவித்ததாவது, மேகமலை உள்ளிட்ட பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழைப் பொழிவு குறைந்த பின், அருவியில் நீர்வரத்து சீரானதாக வனத்துறை அறிவிப்பு வெளியிடும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget