மேலும் அறிய

ஒரு ரயில்வே அதிகாரிக்காக 1000 பயணிகள் அலைக்கழிக்கப்பட்ட கொடுமை - விளக்கம் கேட்ட மதுரை எம்பி

ஒரு அதிகாரியின் நலன் கருதி ஆயிரம் பயணிகளை அலைகழித்தற்காக தெற்கு இரயில்வே பொது மேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என மதுரை எம்.பி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இரயில்வே அதிகாரிக்காக ஆயிரம் பயணிகள் அலைக்கழிக்கப்பட்ட கொடுமை. தெற்கு இரயில்வே பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் - சு. வெங்கடேசன் எம் பி
 
சென்னையிலிருந்து மதுரை செல்ல பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்க நேற்று இரவு (16-11-2023) எழும்பூர் இரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு வண்டி பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளே நுழைந்ததும் எதிர்படும் நடைமேடையான நான்காவது நடைமேடையில் தான் நிறுத்தப்படும். எழும்பூர் இரயில் நிலையத்தை பொறுத்தவரை அது தான் முதல் நடைமேடை.
 

நேற்று வழக்கத்துக்கு மாறாக பாண்டியன் விரைவு வண்டி ஐந்தாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டிருந்தது. சுமார் ஆயிரம் பயணிகள் இங்குமங்குமாக அலைக்கழிந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். வயதானவர்கள், கைக்குழந்தையோடு வரும் தாய்மார்கள் எல்லாம் பரிதவிப்போடு விரைந்து கொண்டிருந்தார்கள். நான் உள்ளே நுழைந்ததும் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் “பாண்டியன் அடுத்த நடைமேடையில் நிற்கிறது சார்” என்றார்.

ஒரு ரயில்வே அதிகாரிக்காக 1000 பயணிகள் அலைக்கழிக்கப்பட்ட கொடுமை - விளக்கம் கேட்ட மதுரை எம்பி
 
நான்காவது நடைமேடையிலும் ஒரு இரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் யாருமே ஏறாத இரயிலாக அது இருந்தது. “இந்த வண்டி எங்கே செல்கிறது? இதை ஏன் நான்காவது நடைமேடையில் நிறுத்தியுள்ளீர்கள்?” எனக்கேட்டேன். “இரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் வந்துள்ளார். நாளை இராமேஸ்வரத்துக்கு ஆய்வுக்கு செல்கிறார். அவருக்காக இந்த வண்டி நிற்கிறது” என்றார். இரயில் நிலைய கட்டுமானப்பணி, தண்டவாள பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு இரயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதருக்காக பத்து பெட்டிகள் கொண்ட முழு இரயில். அந்த ஒரு நபர் படிக்கட்டுகளில் மேலேறி இறங்கி அடுத்த நடைமேடைக்கு செல்லும் சிரமத்தை கொடுக்காமல் வசதி செய்துதரப்பட வேண்டும்  என்பதற்காக சுமார் 1000 பயணிகள் பயணிக்கும் பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைக்கழித்த கொடுமை.

ஒரு ரயில்வே அதிகாரிக்காக 1000 பயணிகள் அலைக்கழிக்கப்பட்ட கொடுமை - விளக்கம் கேட்ட மதுரை எம்பி
 
அதுவும் அந்த இரயில் இரவு 10.40க்குத்தான் புறப்பட உள்ளது. ஆனால் பாண்டியன் விரைவு வண்டியோ இரவு 9.40க்கு புறப்படுகிறது. ஒரு மணிநேரங்கழித்து புறப்படப்போகும் ஒரு மனிதருக்காக இவ்வளவு ஏற்பாடு. பிரிட்டீஷ் காலத்திலிருந்த நிர்வாக அடிமைத்தன மதிப்பீடுகளும், பழக்கங்களும் இன்னும் அதிகம் நடைமுறையில் இருக்கும் துறையாக இரயில்வே துறை இருக்கிறது. எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை தங்களின் வசதிக்காக இன்றளவும் கடைபிடிக்கிற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். ஒரு அதிகாரியின் நலன் கருதி ஆயிரம் பயணிகளை அலைகழித்தற்காக தெற்கு இரயில்வே பொது மேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்” என மதுரை எம்.பி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை பைக் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: மின் கசிவால் லட்சக்கணக்கான வாகனங்கள் நாசம்!
மதுரை பைக் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: மின் கசிவால் லட்சக்கணக்கான வாகனங்கள் நாசம்!
மதுரை மக்களே... உடனே கவனிக்கவும் - இன்று (14.07.2026) மின்தடை லிஸ்ட் இது தான்!
மதுரை மக்களே... உடனே கவனிக்கவும் - இன்று (14.07.2026) மின்தடை லிஸ்ட் இது தான்!
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
Embed widget