மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

’’142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் கேரளா பொதுப்பணித்துறையினர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது’’

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையானது தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும். 15.5 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம். 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள தமிழகத்துக்கு உரிமை உண்டு என கடந்த 2006 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க ஒரு சிறப்பு தீர்ப்பு அளித்தது.


முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 130 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து  138.5 அடியாக உயர்ந்தது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீரை வைகை அணைக்கு திறக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.


முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கேரள அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றம் நீதிபதி ஏ எம் கான்வில்கர் தலைமையில் விசாரிக்கப்பட்டது அப்போது இரு மாநில தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்தனர் அதில் முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்குழு பரிந்துரைத்துள்ள 139.50 அடி வரையிலான தண்ணீர் நவம்பர் 11ஆம் தேதி வரை தேக்கி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது ஆனால் இந்த உத்தரவு வருவதற்கு முன்பே கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களிடம் 29 அம் தேதி காலை 7.30 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட போவதாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.


முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

அதன்படி கேரளா சார்பில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் பொதுப்பணி துறையினர் முன்னிலையில் அணை 29  தேதி காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 534 அடி உபரி நீர் இரண்டு மதகு பகுதியிலிருந்து கேரளா பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்புக்கு தேனி மாவட்ட விவசாயிகள் மட்டும் பொது மக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியது. தேனி மாவட்ட மக்கள் 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என பல நாட்கள் கோரிக்கை வைத்திருந்த இந்த சூழலில் கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பொதுப்பணித்துறையினர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த ஒரு சில நாட்களிலேயே அணையிலிருந்து மேலும் மற்றொரு மதகுகள் வழியாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை இறந்து விட்டனர்.


முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

இந்த நிலையில் அடுத்த ஒரு சில நாட்களில் முல்லைப் பெரியாறு அணையில் ‌ மத்திய ஐந்து பேர் கொண்ட துணை குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, நீர் கசிவு, கேலரி ,கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர்கள் சட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கூடுதல் தண்ணீராக வினாடிக்கு 2000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில்  இன்று முல்லை பெரியாறு அணையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர் குழு மற்றும் தமிழக அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget