மேலும் அறிய
பழனி நில மோசடி: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி! 5 ஆண்டு போலி பதிவுகளுக்கு விசாரணை !
திமுக எப்போதும் தனியாக நின்று 50 சீட்டுகள் கூட வாங்க முடியாது என மதுரையில் அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார் பேட்டி.

அமைச்சர் நிர்மல்குமார்
Source : whatsapp
பழனி வழக்கு விரிவான விசாரணை தேவைப்படுகிறது நிறையே பேரின் தொடர்புகள் உள்ளது என மதுரையில் அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார் பேட்டி.
மதுரை மாநகராட்சி சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் - மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஒப்பந்த மின்வாரிய பணியாளர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு
TNPSC மூலமாக தான் மின்வாரிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் - நிர்மல்குமார்
பழனி நில விவகாரம் குறித்த கேள்விக்கு
பழனி வழக்கு விரிவான விசாரணை தேவைப்படுகிறது நிறையே பேரின் தொடர்புகள் உள்ளது என கணிப்பாக உள்ளது. பல போலி பத்திரங்கள் 5 ஆண்டுகளில் நடந்துள்ளது. இது தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிறைய இடத்தில் சட்டவிரோத பதிவுகள் நடந்துள்ளது. போலி பத்திரபதிவுகள் நடந்துள்ளது.
இவ்வளவு பெரிய விசாரணை இந்த ஆட்சியில் நடந்துள்ளது. ஒன்றாவது கடந்த ஆட்சியில் சிபிசிஐடி விசாரணை சென்றுள்ளதா?
பழனி கோவில் நில விவகாரத்தில் நுணக்கமாக விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. 5 ஆண்டுகளில் போலியாக பதிவு செய்திருந்தால் பொதுமக்கள் புகாரளிக்கலாம். இது கிரிமினல் வழக்கு அரசு நிலங்களை அரசுக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளனர். பாமகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அரசியல் படுத்துதல் என்பது ஆள்புடிக்கிற வேலை இல்லை என்பது குறித்து திருமா பேசியது திமுகவை தான் என்றார்.
அதிமுக எம்எல்ஏக்கள் வெளியில் வரவிடமுடியவில்லை
குதிரை பேர விவகாரத்தில் பல கோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையில் இருக்கும்போது அறிவாலயம் போகமாட்டார். லண்டனில் இருந்து மாவட்ட செயலாளர் மீட்டிங் நடத்தும் அளவிற்கு கட்சி உள்ளது. திமுக கூட்டணி கட்சியால் தான் கடந்த ஆண்டுகளில் ஆட்சியமைக்க முடிந்தது. திமுக எப்போதும் தனியாக நின்று 50 சீட்டுகள் கூட வாங்க முடியாது. அதிமுக எம்எல்ஏ மக்களை சந்திக்க முடியவில்லை. MLAக்களாக தொடர்வது சாதாரண விசயமல்ல. பதவிக்கும் கட்சியில் சேருவதற்கும் தொடர்பு இல்லை. ஆர்பி உதயகுமார் ஓரே கட்சியில் 5 நிலைப்பாடு. எடுக்க கூடியவர் பொதுச்செயலாளர் ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுச்செயலாளராக முயற்சிக்கிறார் என்றார். அனிதா ராதாகிருஷ்ணன் பதட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டவர் போல பேசிவருகிறார். சென்னையில் முடங்கி கிடக்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் வெளியில் வரவிடமுடியவில்லை என்றார்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















