மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்றால் இதை செய்யுங்கள் - அமைச்சர் கே.என்.நேரு

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க வேண்டாம் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மறு ஆய்வு செய்யப்படும் - என கே.என்.நேரு பேட்டி

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மறு ஆய்வு செய்யப்படும் என மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார்.
 

தமுக்கம் மைதானத்தில் ஆய்வு கூட்டம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்,  மூர்த்தி, செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், மதுரை திண்டுக்கல் தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 

கனிமொழி எம்.பி

 
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். திருச்செந்தூருக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும்" என கூறினார்.
 

அமைச்சர் கே.என்.நேரு

 
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "மழைநீர் வடிகாலோடு சாலை வசதிகள் செய்ய வேண்டும், தமிழகத்தில் ஐந்தரை இலட்சம் எல்.இ.டி விளக்குகள் போடப்பட்டுள்ளன. கூடுதலாக 1 இலட்சத்து 50 ஆயிரம் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்படும். புதிதாக பேருந்து நிலையங்கள், மார்கெட் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே 100 அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக அறிவுசார் மையங்கள் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும். நிலுவையில் குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் வேண்டும். குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரியம் கடந்த காலத்தை போல அல்லாமல் சுறு சுறுப்பாக செயலாற்ற வேண்டும்" என கூறினார்.
 

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க வேண்டாம்

 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆட்சோபனை தெரிவிக்க 120 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மறு ஆய்வு செய்யப்படும்" எனக் கூறினார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Congress: கைவிட்ட பீகார்.! ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜகவை 3வது இடத்திற்கு தூக்கியடித்த காங்கிரஸ்
கைவிட்ட பீகார்.! ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜகவை 3வது இடத்திற்கு தூக்கியடித்த காங்கிரஸ்
Rain Alert: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
Embed widget