மேலும் அறிய

Minister K.N. Nehru: ”ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, தடுக்க விரைவில் அறிக்கை..” - மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார்.

மதுரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார், நிகழ்வில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி., சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.


Minister K.N. Nehru: ”ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, தடுக்க விரைவில் அறிக்கை..” - மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

மதுரை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1191 குடியிருப்புகளுக்கு 1926.76 கோடி மதிப்பில் 3 கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 84.12 கோடி மதிப்பில் வைகை ஆற்றங்கரைகளை மேம்படுத்தும் பணிகள், 23 கோடி மதிப்பில் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம், 3.50 கோடி மதிப்பில் மாநகராட்சி அலுவலகத்தில் பொன் விழா நுழைவு வாயில் மற்றும் அபிவிருத்தி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் "இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள நகர்புறங்களில் கூடுதலாக 50 சதவீத மக்கள் வசிக்கிறார்கள், தமிழக நகர்புற மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு கிராமப்புற மக்களை மையமாக கொண்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என பேசினார்.


Minister K.N. Nehru: ”ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, தடுக்க விரைவில் அறிக்கை..” - மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் "ஒராண்டில் மதுரை மாநகராட்சியில் 717 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் 95 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் 107 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்தில் இராண்டில் 2,920 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. அமைச்சர் மூர்த்தி கோரிக்கைக்கு இணங்க மதுரைக்கு போக திருச்சிக்கு திட்டங்கள் கொடுத்தால் போதுமானது, 2 வது தலைநகராக விளங்கும் மதுரையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 1,500 கோடி ரூபாய் மதிப்பில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணியில் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு பைப் லைன் அமைக்க வேண்டும், இப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து பைப் லைன் மூலம் கொண்டு வரும் அம்ரூத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்" என பேசினார்.


Minister K.N. Nehru: ”ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, தடுக்க விரைவில் அறிக்கை..” - மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு கூறுகையில் "அடையாறு, பக்கீம், கூவம் போன்ற ஆறுகளில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் கலக்கிறது, கழிவு நீரை சுத்தப்படுத்தி மீண்டும் நீரை ஆற்றுக்குள் விடும் பணிகளுக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலக்கிறது, வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மதுரை 2 ஆம் தலைநகர் மாற்றுவதற்கு அமைச்சர் மூர்த்தி கேட்டதற்கு பதில் அளித்தேன், 2 வது தலைநகர் குறித்து முதல்வர்தான் அறிவிக்க வேண்டும்" என கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget