மேலும் அறிய

7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2012ல் 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார். 
 
அந்த மாணவி அலறியபோது, கழுத்தை நெரித்து கொலை செய்தார். செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து சுப்பையாவை கைது செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் சுப்பையாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நடந்த சம்பவங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. போதுமான சாட்சியம் மற்றும் ஆவணங்களின்படியே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தலையிட வேண்டியதில்லை” எனக் கூறி தண்டனை வழங்கிய மகளிர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 
 

 

 

சுங்கம் பள்ளிவாசல் முறைகேடு புகார் மீது 2 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளனர். 
 
மதுரை கீழவெளிவீதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
”மதுரை சுங்கம் பள்ளிவாசல் 300 ஆண்டுகள் பழமையானது. இது வக்புவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் ஜமாத்தின் இணை செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்தநிலையில் அங்கு முறையற்ற நிர்வாகம், நிதி முறைகேடுகள் நடப்பதாக கூறி, அதன் செயற்குழு உறுப்பினர்கள் வக்பு வாரியத்தில் 2018-ம் ஆண்டில் புகார் செய்தனர். இதற்கிடையே நடந்த தேர்தலில் அதே நிர்வாகிகள் மீண்டும் தேர்வானார்கள். முறைகேடுகள் குறித்து ஏற்கனவே அளித்த புகார் மீதான விசாரணைக்கு சுங்கம் பள்ளிவாசல் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
 
அதன்பேரில் வக்பு வாரிய விசாரணையில் ஆஜரான அனைத்து தரப்பினரும், தங்கள் தரப்பு தகவல்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். விசாரணை முடிவடைந்தும் தற்போது வரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த பள்ளிவாசல் நிர்வாக தலைவர், செயலாளர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் நிர்வாகிகளாக தொடருவதை அனுமதிக்கக்கூடாது. எனவே சுங்கம் பள்ளிவாசல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரித்தன்பேரில் உரிய உத்தரவை பிறப்பிக்க வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இதுதொடர்பாக தகுதி அடிப்படையிலும், சட்டப்படியும் தகுந்த உத்தரவை 2 மாதத்தில் பிறப்பிக்க வேண்டும் என்று வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்..ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்..ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
TN WEATHER ALERT: இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Embed widget