மேலும் அறிய

Madurai: உப்பு நீரும் நன்னீராகிறது; உசிலம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அண்ணாச்சி

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 நாட்களாவது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட நிரந்தர அரசாணை வழங்கி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உப்பு நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் பெருமிததுடன் தெரிவித்து வருகின்றனர்.
 

வறட்சியை தாண்டி வெற்றிக் கொடிநாட்டும் விவசாயிகள்

 
உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் போதிய நீர் இல்லாததால் வறட்சி சூழலை தான் பார்க்க முடியும். விவசாயம் பொய்த்துப் போனதால் பல இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு முறுக்கு சுத்தும், தொழிலை நம்பி வெளியேறிவிடுகின்றனர். இதையும் தாண்டி, பல விவசாயிகள் விவசாயத்தை வெற்றிகரமாக கொண்டு செலுத்துகின்றனர். ”சியான் காலத்தில் இருந்து விவசாயத்தை கைவிடாமல் செய்கிறோம்” - என உசிலம்பட்டி விவசாயிகள் சொல்வதை கேட்கும் போது மற்ற பகுதி விவசாயிகளுக்கு தெம்புகிடைக்கும். இந்நிலையில் உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

கிணறுகளிலும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களிலும் ஊற்று நீர் உருவாகியுள்ளது

 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக இருந்த 58 கால்வாய் திட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்மாய் 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்த கண்மாய்கள் மற்றும் இக் கால்வாய் செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டமும் ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்துவிடப்படும் போதும் கணிசமாக உயர துவங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்பே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த சிறு மழைக்கே உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகளிலும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களிலும் ஊற்று நீர் உருவாகி ஆங்காங்கே நீர் வெளியேறி வருகிறது.
 
உப்பு நீராக இருந்த நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி
 
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை 3 முதல் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் இல்லாமல் ஆயிரம் அடிக்கு மேல் சென்ற நிலத்தடி நீர் மட்டம், 30 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு உயர்ந்து ஆங்காங்கே ஊற்றுகளாக உருவாகியுள்ளது. இதனால் நீர் நிலைகளும் நிரம்பி வழிவதோடு, உப்பு நீராக இருந்த நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 நாட்களாவது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட நிரந்தர அரசாணை வழங்கி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி! முறையற்ற மருத்துவ பயிற்சி: ஒரே நாளில் இருவர் கைது
திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி! முறையற்ற மருத்துவ பயிற்சி: ஒரே நாளில் இருவர் கைது
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Embed widget