மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா ?
மதுரையில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி நகருக்குள் சென்று வர 22 -ம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
![மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா ? Madurai traffic will be changed on a trial basis Do you know when and in which area - TNN மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/d345a56f6fae0a4b22377649d110f2a61679142368161184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை
மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகளுக்காக நாளை (22 -ம் தேதி) சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறதாக, மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி நகருக்குள் சென்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
கோரிப்பாளையத்தில் புதிய பாலம்
மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நாள்தோறும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டுத்தவணி சாலையில் தனியார் வணிக நிறுவனம் மற்றும் முக்கிய தனியார் மருத்துவமனையால் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது. அதே போல் நெல் பேட்டை பகுதியில் வெங்காய மார்கெட் செயல்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. அதே போல் கோரிப்பாளையம், ஆவின் பால்பண்ணை, சிக்னல் என பல இடத்தில் கடுமையான போக்குவரத்து நிலவுகிறது. இந்நிலையில் கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து சிரமத்தை குறைக்க புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த சூழலில் மேம்பால பணிகளுக்காக நாளை சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறதாக மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முற்பகல்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, வைகை வடகரை ரோடு, செல்லூர் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும். நத்தம் மற்றும் அழகர்கோவில் ரோடு வழியாக ஆரப்பாளையம் மற்றும் பெரியார் செல்லும் வாகனங்கள் அவுட் போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு. கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி பாலம் வழியாக வந்து கீழவெளிவீதி மற்றும் யானைக்கல், வடக்கு மாரட் வீதி செல்ல வேண்டும். பெரியார் பேருந்து நிலையம் மற்றும் செல்லுார் புதுப்பாலம் வழியாக கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் எவ்வித மாற்றமுமின்றி தமுக்கம் கோகலே ரோடு, ஐ.ஓ.சி ரவுண்டான வழியாக நத்தம், அழகர்கோயில் சாலை மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
பிற்பகல்
பெரியார் பேருந்து நிலையம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம்.எம் லாட்ஜ், இ-2 சாலை, அரசன் பேக்கரி, நவநீதகிருஷ்னன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு, IOC ரவுண்டானா வழியாக வந்து நத்தம் சாலை, அழகர்கோயில் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், நத்தம் சாலை, அழகர்கோவில் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் தமுக்கம் சந்திப்பில் வலதுபுறம் ( Wrong Right) திரும்பி நார்த் கேட் , தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஆல்பட் விக்டர் பாலம் செல்ல வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: 17 ஆண்டுகளுக்கு பிறகு! கண்டதேவியில் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது; கரையோர மக்களுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion