மேலும் அறிய

Madurai ; தமிழகம் மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம் - மதுரையில் சீறிய வைகோ !

சினிமா டயலாக்கை விட்டு வெளியே வரவேண்டும், அவர் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார். - விஜயை தாக்கி வைகோ பதில்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அச்சுறுத்துகின்ற பாணியில் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. -வைகோ பேட்டி*
 
*விஜய் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார்.*
 
தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது - வைகோ பேட்டி
 
கட்சி நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது...,” திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்டிருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்னை திட்டமிட்டு இந்துத்துவாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தத் தூணில் விளக்கு ஏற்றும் பழக்கம் இல்லை உச்சிப்பிள்ளையார் கோவிலிலேயே சுடரேற்றுவார்கள். இந்த முறை திட்டமிட்டு அவர்கள் ஏற்ற முயற்சித்ததும், அந்த முயற்சி நடக்கும் போதே துலாக்கோள் நிலையில் இருந்து மீறி நீதியை பறிப்பாளனம் செய்யக்கூடிய நீதி அரசர் இந்துத்துவவாதியை போல தன்னுடைய மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு விளக்கு ஏற்றாவிட்டால் நடப்பது வேறு என்று அச்சுறுத்துகின்ற பாணியில் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. 
 
எந்தவித கலவர உணர்ச்சிக்கும் இடமும் கொடுக்கவில்லை
 
நீதித்துறை, நிர்வாக துறை, சட்டமன்றம் மூன்றும் சேர்ந்த தான் ஒரு அரசு இயங்குகிறது. நீதித்துறையை சேர்ந்தவர்கள் சமீப காலமாக தனிப்பட்ட சொந்த வெறுப்புகள், சொந்த கருத்துக்களை திணிக்கின்ற முயற்சிகளை அண்மை காலத்தில் தான் அபாயம் சூல்கிறது. ஆனால் மக்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை மக்கள் ஒற்றுமையாக எடுக்கிறார்கள். இந்துக்கள் ஆகட்டும், இஸ்லாமியர்கள் ஆகட்டும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் அவர்கள் எந்தவித கலவர உணர்ச்சிக்கும் இடமும் கொடுக்கவில்லை. அந்த நிலைமை தான் நீடிக்க வேண்டும்.
 
தமிழகம் மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம் 
 
அதேபோல திடீரென்று வந்தே மாதர கொடியை தூக்கிக்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு அதற்கு உடன்படாததற்கு என்ன காரணம். இது பக்கிம் சந்தர் சட்டர்ஜி தான் எழுதிய ஆனந்தமடம் நாவலில் இந்த வந்தே மாதரம் கவிதையை பதிவு செய்திருந்தார்கள். அரவிந்தர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் போது தமிழ் படுத்தி போட்டிருந்தார்கள். முதல் வரிகள் பிரச்சனை இல்லை கடைசி இரண்டு வரிகள் இந்து கடவுள்களை பெயர்களை சொல்லாமல் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இன்று அவர்களை புகழ்ந்து பாடுகிற விதத்தில் தான் அமைந்திருந்தது. அதனால் தான் வந்தே மாதரத்தை அப்போது ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நேரும் அவர்களும் சொன்னார். வங்கத்து சிங்கம் நேதாஜியும் அதே கருத்தை தான் தெரிவித்தார். இப்போது அது பேசு பொருளாகி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ளது. புதிதாக எப்படி இந்துத்துவாவை திணிக்கலாம் என்றும், அதுவும் தமிழ்நாட்டிற்குள் எப்படி திணிப்பது என்றும் படு பேராசைப்படுகிறார்கள் எல்லா விதத்திலும். ஆனால் இது தமிழகம் மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம். இங்கு அப்படி விஷத்தை கக்கி வேறுபாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்த ஒரு காலம் முடியாது. திராவிட இயக்கத்திலே ஊறி திளைத்த பூமி பெரியார், அண்ணா L, கலைஞரால் என எண்ணற்ற தியாகிகளால் பக்குவப்படுத்தப்பட்ட மாநிலம் தான் தமிழ்நாடு. எனவே இந்த பிரச்சனைகளில் அவர்கள் இந்துத்துவா, ஆர் எஸ் எஸ் பின்னணியில் இந்தியாவை காவி மயம் பார்க்க வேண்டும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். உத்தர் பிரதேசம், பிஹாரில் வேண்டுமென்றால் செய்யலாமே தவிர தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவர்கள் ஒருபோதும் ஒரு சதவீதம் கூட திணிக்க முடியாது என்பது திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
விஜய் அரசியல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு
 
அவர் சினிமா டயலாக்கை விட்டு வெளியே வரவேண்டும், அவர் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார். 41 உயிர்கள் பலியான போது, பதறி துடிக்காமல் ஒருநாள் திருச்சியில் தங்கி விட்டு, மறுநாள் அந்த உயிரற்ற சடங்களுக்கு மலர் வணக்கம் செய்துவிட்டு குடும்பத்தினருக்கு அனுதாபம் இறங்கலும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் இருக்கிறது. கடுகு அளவு பொறுப்புணர்ச்சி கூட இல்லாமல் அவர் இரவோடு இரவாக சென்னைக்கு சென்றதும். 40 நாட்கள் கழிய போகிற நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தான் இடத்திற்கு அழைத்து துக்கம் கேட்பது, இதுவரை எந்த தலைவர்களும் சாதாரண மனிதர் வரை யாராக இருந்தாலும் சொந்தமாக இருந்தால் வீட்டிற்கு சென்று தான் துக்கம் கேட்க வேண்டும். இப்படி ஒரு விசித்திரமான முறையை கொண்டு வந்து, தன்னிடத்திற்கு அழைத்து வந்து அனுதாபம் தெரிவித்து, நிதி கொடுத்தது. அவர் எடுத்து வைத்திருக்கும் புதல் அடியே பிழையாக போய்விட்டது. அவர் எங்க வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அந்த கூட்டத்தை பாதுகாப்பதும், நெரிசலில் பெண்கள், சிக்கிமாண்டு போனதைப் போல ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் அதை நடத்துபவர்கள் தான் பொறுப்பு. அதில் தவறி விட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல புதுச்சேரி என எங்கு சென்றாலும், அந்த பிரச்சாரத்தில் அவர் சொல்கின்ற கருத்தை கவனித்து பார்ப்போம்” என கூறினார்.
 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget