மதுரையில் கனமழை: வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவு தேங்கிய நீரில் சிக்கிய வாகன ஓட்டிகள்!
சாலைகளின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை வைகை வடகரை சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.

மதுரையில் பெய்த கனமழையால் மதுரை வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீரில் மூழ்கியபடி செல்லும் வாகனங்கள் பழுதாகி நின்று வருவதால் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்.
பெரியார் பேருந்து நிலையம் மதுரை ரயில்வே நிலையத்தை சூழ்ந்த மழை நீர் அவதியடைந்த பயணிகள்
மதுரையில் இன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை கனமழை பெய்தது. மதுரை மாநகரின் பிரதான பகுதிகளான பெரியார் பேருந்து நிலையம், எல்லிஸ்நகர், சிம்மக்கல் மதுரை ரயில்வே நிலையம் வைகை ஆற்றுக் கரையோர பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதன் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கின்றதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால் பயணிகள் சிரமத்தோடு சென்றனர்.
மதுரை வைகை வடகரை சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.
சாலைகளின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போன்று மதுரை மாநகர் செல்லூர், நரிமேடு தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்த நிலையில் மதுரை வைகை வடகரை சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. சேறும் சகதியுமாக மழை நீர் தேங்கி நின்ற நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதி முதல் ஆரப்பாளையம், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் சேறும் சகதியுமாக தேங்கிய மழைநீரில் மூழ்கிய படி சென்றன. இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றதால் சில வாகனங்கள் நீரில் மூழ்கி பழுதடைந்து நின்றது இதனால் வாகன ஓட்டிகள் தங்களது பணிக்கு செல்ல முடியாமல் பழுதடைந்த நிலையில் காத்திருந்தனர். மேலும் இருசக்கர வாகனத்தின் செல்பவர்கள் காலை உயர்த்தியபடி வாகனத்தை இயக்கியதால் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலையும் உருவானது. வைகை வடகரை பகுதியில் சிறிய அளவிற்கான மழை பெய்யும்போது கூட இதுபோன்று மழை நீர் தேங்கி நிற்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் இதற்கான நிரந்தர தீர்வை மதுரை மாநகராட்சியும் பொதுப்பணித்துறை இணைந்து எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















