மேலும் அறிய

மதுரை ரயில் நிலையம் பணிகள் 50% நிறைவு... பயணிகளுக்கு காத்திருக்கும் நவீன வசதிகள்!

மதுரை ரயில்நிலையத்தில் மேற்கு பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஒரு அடுக்கு கொண்ட 2,580 சதுர அடி வாகன காப்பகமும் அமைக்கப்படும். 

Madurai Railway Station - மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி மறுசீரமைப்பில் கட்டப்படும் கட்டடங்கள் பசுமை கட்டிடங்களாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகத் தரத்திற்கு உயரும் மதுரை ரயில் நிலையம் 

மதுரை ரயில் நிலையம் பயண கட்டண வருவாய் அடிப்படையில் புறநகர் அல்லாத ரயில் நிலைய பிரிவு 2 என தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் தினந்தோறும் 96 ரயில்களை கையாண்டு சராசரியாக 51,296 பயணிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த முக்கியமான ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மறு சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. மறுசீரமைப்பு பணிகளை ரூபாய் 347.47 கோடி செலவில் மேற்கொள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
 
மறு சிரமைப்பு பணிகள் விபரம் 
 
ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலிலும் மேற்கு நுழைவாயிலிலும் நிலைய முனைய கட்டடங்கள் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு பக்கத்தில் இரு பல்லடுக்கு வாகன காப்பகங்கள் மற்றும் மேற்கு பக்கத்தில் ஒரு பல்லடுக்கு வாகன காப்பகமும் அமைக்கப்படும். மேலும் ரயில் நிலையத்தையும் பெரியார் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப் பாதை, பார்சல்களை நடைமேடைகளுக்கு மாற்ற தனி நடை மேம்பாலம், நேரடியாக இருபுறமும் வாகன காப்பகங்களுக்கு செல்ல இரண்டு நடை மேம்பாலங்கள் ஆகியவை அமைக்கப்படும். 
 
கிழக்கு முனைய கட்டடம் 
 
கிழக்கு முனைய கட்டடம் இரண்டு மாடியுடன் 22,576 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டட முகப்பு மதுரை நகர பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் அமையும். தரைதளத்தில் உலக தரத்தில் கழிப்பறைகள், பொருள் வைப்பறை, உதவி மையங்கள், குழந்தை பராமரிப்பு பகுதி போன்றவை அமைக்கப்படும். நிலையத்திலிருந்து ரயிலில் புறப்படும் பயணிகள் மற்றும் வருகை தரும் பயணிகள் தனித்தனியாக வந்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முதல் தளத்தில் காத்திருப்பு அறைகள், தங்கும் அறைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், கழிப்பறைகள் அமையும். இரண்டாவது தளம் வணிகப் பயன்பாட்டுக்காக உபயோகிக்கப்படும். 
 
ரயில் பாதைக்கு மேல் காத்திருக்கும் பகுதி 
 
ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக இரண்டு முனையை கட்டிடங்களையும் இணைத்து ரயில் பாதைக்கு மேல் 110 மீட்டர் அகலத்தில் காத்திருப்பு தளம் அமைக்கப்படும். கிழக்கு முனையை கட்டிட முதல் தளத்திலிருந்து இந்த காத்திருப்பு தளத்திற்கு பயணிகள் செல்ல முடியும். அங்கிருந்து நடைமேடைகள் வரும் ரயில்களையும் பார்க்க முடியும். மேலும் ரயில் வரும்போது 4 படிக்கட்டுகள், இரண்டு ஜோடி நகரும் மின் படிக்கட்டுகள், இரண்டு முன் தூக்கிகள் வாயிலாக நடைமேடைகளை சென்று சேர முடியும்.
 
மேற்கு முனையை கட்டிடம் 
 
மேற்கு பகுதியில் இரு மாடி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பயணச்சீட்டு அலுவலகங்கள், ரயில்வே சேவை அலுவலகங்கள், தேவையான பயணிகள் வசதிகள் ஆகியவை அமைக்கப்படும். 
 
பல்லடுக்கு வாகன காப்பகம் 
 
கிழக்குப் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இரண்டு அடுக்குகள் கொண்ட 9,430 சதுர அடி வாகன காப்பகமும், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த மூன்று அடுக்கு கொண்ட 2,822 சதுர அடி வாகன காப்பகம் அமைக்கப்படும். மேலும் மேற்கு பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஒரு அடுக்கு கொண்ட 2,580 சதுர அடி வாகன காப்பகமும் அமைக்கப்படும். 
 
அணுகு சாலைகள் அமைக்கப்படுகிறது.
 
தங்குதடையற்ற பயணிகள் வருகைக்காக திட்டமிடப்பட்ட அணுகு சாலைகள் அமைக்கப்படுகிறது. நேரடியாக பேருந்து நிறுத்தம் மற்றும் ஆட்டோ நிறுத்திமிடம் ஆகியவற்றிற்கு செல்வதற்கு தனியாக நடை மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி மறுசீரமைப்பில் கட்டப்படும் கட்டிடங்கள் பசுமை கட்டடங்களாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 50 % பணிகள் நிறைவடைந்துள்ளது, என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!
ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!
பழனி உண்டியலில் 20 நாட்களில் ரூ.2.89 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி குவிப்பு!
பழனி உண்டியலில் 20 நாட்களில் ரூ.2.89 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி குவிப்பு!
மதுரை மின்தடை: நாளை ஜூலை 23ல் எந்தெந்த பகுதிகள்? முழு லிஸ்ட் வெளியீடு!
மதுரை மின்தடை: நாளை ஜூலை 23ல் எந்தெந்த பகுதிகள்? முழு லிஸ்ட் வெளியீடு!
மதுரை த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை திணறடித்த முதியவர்: 6 சிலிண்டர் எங்கே? - என கேள்வி எழுப்பினார் !
மதுரை த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை திணறடித்த முதியவர்: 6 சிலிண்டர் எங்கே? - என கேள்வி எழுப்பினார் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Car Theft : ’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்! - இந்த பட்டியலில் உங்க கார் இருக்கா?
’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்!
Embed widget