மேலும் அறிய
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
அரசு பேருந்துகளில் LED திரைகள் தொடர்ந்து ஹேக் செய்யப்பட்டு வேறு வித வார்த்தைகள் இடம்பெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

LED பெயர்பலகை
Source : whatsapp
மதுரை பயலுகடா கொடூரமா! என்ற பெயர் பலகையுடன் ஓடிய அரசு பேருந்து - அரசு பேருந்துகளின் போர்டுகளில் தொடரும் குளறுபடி.
மதுரை பயலுகடா கொடுரமா என்ற வாசகத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற அரசு பேருந்தில் உள்ள LED பெயர்பலகையில் மதுரை பயலுகடா கொடுரமா என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றபடி இயக்கப்பட்டன. இதனை பார்த்த பயணிகள் எந்த ஊருக்கு இந்த பேருந்து செல்கிறது என குழம்பியபடி நின்றனர். அரசு பேருந்துகளில் உள்ள எல்இடி திரைகள் தொடர்ந்து ஹேக் செய்யப்பட்டு வேறு வித வார்த்தைகள் இடம்பெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.
டிஜிட்டல் போர்டுகளை ஹேக் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து சமூக ஆர்வலர் M.P.சங்கரபாண்டியன் நம்மிடம் பேசுகையில்...," மதுரை எனும் கோயில் நகரத்தை குறைத்து மதிப்பிடும் நோக்கில் சினிமா, இணையங்களில் கொலை நகரமாக சித்தரிக்கின்றனர். மதுரையில் பேசாத புதிய வார்த்தைகளையும் திணிக்கின்றனர். இதனால் மதுரை என்றால் பயங்கரமான நகரம், பதட்டமான நகரம் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த சூழலில் அரசு பேருந்துகளில் கொடூரமா, மதுரைக் காரன் டா என்பது போல வசனங்கள் இடம்பெறுவது வருத்தம் அளிக்கிறது. மேலும் இது போன்ற டிஜிட்டல் போர்டுகள் வாசகங்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே பழையபடி சாதார எழுத்துப் பலகைகளை மட்டும் பேருந்துகளில் பயன்படுத்த வேண்டும் என மதுரை மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன். மேலும் பேருந்துகளில் டிஜிட்டல் போர்டுகளை ஹேக் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கவுள்ளதாகவும்" தெரிவித்தார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















