மேலும் அறிய
மதுரை ஹோட்டலில் ஒரு ரவா தோசை ரூ.189... மேலும் டிப்ஸ், ஜிஎஸ்டி என வாடிக்கையாளருக்கு பில் ஷாக்!
ஒரு ரவா தோசை 189 ரூபாய், டிப்ஸ்க்கு GST வரி STAFF CONTRIBUTION 4% என டிப்ஸ்க்கு % போட்ட மதுரை ஹோட்டல்.

ஒரு ரவா தோசை ரூ.189
Source : whatsapp
குடும்பத்தோடு சாப்பிடனும்னா பர்சனல் லோன் தான் போடனும் பில் ஷாக்கில் இருந்து மீள்வதற்கு சீரக மிட்டாய், கமர்கட்டு மிட்டாய் வழங்கியதாக சமூகவலைதளத்தில் கிண்டலாக பதிவிட்ட வாடிக்கையாளர்.
சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகும் பதிவு.
மதுரை மாநகர் ஐயர் பங்களா கண்ணனேந்தல் சந்திப்பு அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் ( மருதீஸ்வரர் ) என்ற Luxury உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ரவா தோசை சாப்பிட்டுவிட்டு பில்டர் காபி கொடுத்துள்ளார். இதனையடுத்து உணவிற்கான பணத்தை செலுத்துவதற்காக பில் வாங்கி பார்த்த போது அதில் ரவா தோசை ஒன்று 189 ரூபாய் என பெங்களூரு நகரில் உள்ள விலை போல ரேட் போடப்பட்டிருந்தது. இதே போன்ற ஒரு பில்டர் காபி விலை 69 ரூபாய் எனவும் ஒட்டுமொத்தமாக இரண்டும் சேர்த்து 258 ரூபாய் பில் போடப்பட்டது. மேலும் அதே பில்லில் Staff Contribution 4% Optional என டிப்ஸ்க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதில் 10 ரூபாய் 32 பைசா எனவும் ஒட்டுமொத்தமாக டிப்ஸோடு சேர்ந்து 268 ரூபாய் 32 பைசாவிற்கு டிப்ஸ்க்கும் சேர்த்து 5 சதவிகித GST வரி யாக மொத்தம் 13ரூபாய் 42 பைசா போடப்பட்டிருந்தது.
கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மேலும் ரவுண்ட்- அப் என போடப்பட்டு ஒட்டுமொத்தமாக 282 ரூபாய் பில் போடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் பணத்தை செலுத்தி விட்டு தற்போது இது குறித்த பதிவை பில்லுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கடவுளுக்கு நன்றி நான் தனியாக சென்றேன்!!! குடும்பத்தோடு போய் சாப்பிட வேண்டும் என்றால் பில் கட்டுவதற்கு பர்சனல் லோனுக்கு தான் அப்ளை செய்ய வேண்டும் போல எனவும், வரவேற்பு குளிர்பானம், பில்லின் ஷாக்கில் இருந்து மீள்வதற்கு வெள்ளை சீரக மிட்டாய் மற்றும் 4 கமர்கட்டு முட்டாய் கொடுத்தார்கள் எனவும் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
டிப்ஸ் எப்படி ஜிஎஸ்டி போடுவீர்கள் என்று கேள்வி அளிப்பதற்கு பதில் கிடைக்கவில்லை.
உணவகம் வசதியான அனுபவம் என்றாலும் பட்ஜெட் அதிர்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து உணவக தரப்பில் விளக்கம் கேட்டபோது தாங்கள் டிப்ஸ் என்பதை கட்டாயப்படுத்தி கேட்பதில்லை ஆப்ஷனல் என்கின்ற அடிப்படையிலேயே கேட்டுள்ளோம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தனர். டிப்ஸ் எப்படி ஜிஎஸ்டி போடுவீர்கள் என்று கேள்வி அளிப்பதற்கு பதில் கிடைக்கவில்லை. மேலும் சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாடிக்கையாளரிடம் தாங்கள் பேசி விளக்கம் அளித்துள்ளதாகவும் உணவக தரப்பில் தெரிவித்தனர்.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















