மேலும் அறிய

அறநிலையத்துறை அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை 

குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பெல்ஜியம் நாட்டின் பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

அறநிலையத்துறை அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை 

மதுரையை சேர்ந்த சுதர்சனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, சட்டம் 1959 - இன் படி செயல்பட்டு வருகிறது. சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்த துறை சார்பாக இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பாணை 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை ஆணையரால் வெளியிட்டப்பட்டது. இந்த புதிய விதியில், "3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளித்துறை பணியாளர்கள்,  செயல் அலுவலர் நிலையில் உள்ள மற்றொரு அறநிலையத்திற்கு மாறுதல் செய்யப்படுவார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரே அறநிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களின் பட்டியல் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை சுழற்சி முறையில், ஒவ்வொரு ஆண்டும்  மற்ற அறநிலையத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும்.


அறநிலையத்துறை அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை 

பழைய விதிகளே போதுமானதாக உள்ள நிலையில், புதிய விதிகள் சட்டத்திற்கு புறம்பானது. ஆகவே, "இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் தொடர்பான அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு   இடைக்கால தடை விதிப்பதோடு, அவற்றை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும்  அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையின் செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


 
குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பெல்ஜியம் நாட்டின் பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு  பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.அதில், " சென்னையில் உள்ள சில தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை டிரெக்கிங் கிளப் (சிடிசி) எனும் அமைப்பை 2013 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம்.  மகளிர் தினத்தை முன்னிட்டு கொழுக்கு மலை மற்றும் குரங்கனி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டனர். முறையான அனுமதி பெற்றே 27 பேருடன் மலைக்கு சென்றுள்ளார். ஆனால், குரங்கனியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.  அவர்கள் இறந்த காரணத்தால், 27 பேரும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினர் கூறி வருகின்றனர்.
 
இதில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, என் மீதான வழக்கை  ரத்து செய்து உத்தரவிட வேண்டும் " என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget