மேலும் அறிய

குன்னத்தூர் சத்திரத்தின் உறுதி தன்மையை பாதுகாக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

’’கடைகளை ஒதுக்கீடு செய்வது ஒப்படைப்பது  இங்கு முக்கியம் இல்லை. முதலில் கட்டிடம் பாதுகாப்பானதா? என்பது உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்து’’

மதுரை மாவட்டம், பி.பி.குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புதுமண்டபத்திலுள்ள கடைகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.  2006ஆம் ஆண்டு 20 கடைகளுடன் செயல்பட்டு வந்த குன்னத்தூர் சத்திர கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக 200 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது புதுமண்டபத்தில் செயல்பட்டு வரும் 300 கடைகள், ஏற்கனவே குன்னத்தூர் சத்திரத்தில் செயல்பட்ட 20 கடைகள் என சேர்த்து, புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், தற்போது கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் பின்பற்றப்பட்டு கட்டப்படவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் 200 கடைகள் மட்டும் கட்டப்பட்டுள்ள நிலையில், அதில் 300 கடைகள் அமைந்தால் விசேஷ நேரங்களில் அதிகமான மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் கட்டிடத்திற்கு செல்ல ஒரு வழிபாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவசர வழிகள் அமைக்கப்படவில்லை. மேலும் முறையான வாகனம் நிறுத்துமிட  வசதிகள் செய்யப்படவில்லை. 300 கடைகள் செயல்பட உள்ள கட்டிடத்தில் 100 இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கான இடம் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்கான முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
 
எனவே,புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், அதுவரை குன்னத்தூர் சத்திர கட்டிடத்தை திறக்க தடை விதித்தும்  உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பத்திரிக்கைகளில் குன்னத்தூர் சத்திரத்திலுள்ள கடைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது திறப்பதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது"என தெரிவிக்கப்பட்டது.
 
மதுரை மாநகராட்சி தரப்பில்,"கடைகள் ஒதுக்கீடு மட்டுமே நடைபெறுகிறது. கடைகள் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், கடைகளை ஒதுக்கீடு செய்வது ஒப்படைப்பது  இங்கு முக்கியம் இல்லை. முதலில் கட்டிடம் பாதுகாப்பானதா? என்பது உறுதி செய்ய வேண்டும் என கூறி மதுரை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Pakistan Tension: ’முப்படைகளையும் இறக்கிய இந்தியா” கதிகலங்கி போன பாகிஸ்தான்..!
India Pakistan Tension: ’முப்படைகளையும் இறக்கிய இந்தியா” கதிகலங்கி போன பாகிஸ்தான்..!
India Pakistan Tension: அம்பலமான நாடகம்! தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் - ஆத்திரத்தில் இந்தியா
India Pakistan Tension: அம்பலமான நாடகம்! தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் - ஆத்திரத்தில் இந்தியா
India Pakistan War: BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி..  பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா!  ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..
India Pakistan War: BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..
Indian Army : “சீண்டியா பாக்குறீங்க?” பாகிஸ்தானை நோக்கி ஆக்ரோஷமாக இறங்கிய இந்திய ராணுவம்..!
Indian Army : “சீண்டியா பாக்குறீங்க?” பாகிஸ்தானை நோக்கி ஆக்ரோஷமாக இறங்கிய இந்திய ராணுவம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhitaபதிலடியா? பீகார் தேர்தல் உத்தியா?”தீவிரவாதத்துக்கு பொறுப்பு மோடி?”நெருக்கும் எதிர்க்கட்சிகள் | india attack pakistanPAK-ஐ கதறவிட்ட சிங்கப்பெண்கள்! Operation Sindoor HEROINES யார் இந்த சோபியா & வியோமிகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Pakistan Tension: ’முப்படைகளையும் இறக்கிய இந்தியா” கதிகலங்கி போன பாகிஸ்தான்..!
India Pakistan Tension: ’முப்படைகளையும் இறக்கிய இந்தியா” கதிகலங்கி போன பாகிஸ்தான்..!
India Pakistan Tension: அம்பலமான நாடகம்! தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் - ஆத்திரத்தில் இந்தியா
India Pakistan Tension: அம்பலமான நாடகம்! தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் - ஆத்திரத்தில் இந்தியா
India Pakistan War: BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி..  பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா!  ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..
India Pakistan War: BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..
Indian Army : “சீண்டியா பாக்குறீங்க?” பாகிஸ்தானை நோக்கி ஆக்ரோஷமாக இறங்கிய இந்திய ராணுவம்..!
Indian Army : “சீண்டியா பாக்குறீங்க?” பாகிஸ்தானை நோக்கி ஆக்ரோஷமாக இறங்கிய இந்திய ராணுவம்..!
'புரளியா பரப்புறீங்க?” 8 ஆயிரம் ட்விட்டர் கணக்கை முடக்கியது இந்தியா..!
'புரளியா பரப்புறீங்க?” 8 ஆயிரம் ட்விட்டர் கணக்கை முடக்கியது இந்தியா..!
”பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்திய ராணுவம்” அடுத்தடுத்து அதிரடி..!
”பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்திய ராணுவம்” அடுத்தடுத்து அதிரடி..!
Pope Leo XIV: புதிய போப் ஆண்டவர் தேர்வு! யார் இவர்? புது போப்பின் புதிய பெயர் இதுதான்!
Pope Leo XIV: புதிய போப் ஆண்டவர் தேர்வு! யார் இவர்? புது போப்பின் புதிய பெயர் இதுதான்!
Karachi Port Attack: ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க பாகிஸ்தான்.. களத்தில் இறங்கிய கடல் படை..
Karachi Port Attack: ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க பாகிஸ்தான்.. களத்தில் இறங்கிய கடல் படை..
Embed widget