மேலும் அறிய

பனைமரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க? - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

2021 -ம் ஆண்டு அரசால் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இது வரை பனைமரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
பனை மரங்கள் பாதுகாக்க மனு
 
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சுப்பையா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனை மரத்தை நம்பி ஏராளமான பனைத் தொழிலாளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பனங்கருப்பட்டி , பனங்கற்கண்டு போன்ற உணவுப் பொருட்கள் முக்கியமானது. பனையில் இருந்து கிடைக்கும் இந்த பொருட்கள் ஆரோக்கியங்களை வழங்குகிறது.
 
 
வெளியூர் செல்லும் பனை பொருட்கள்
 
பனை சார்ந்த பொருட்கள் தமிழகம் மட்டுமல்லது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. உடன்குடி பனங்கருப்பட்டிக்கு  புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது தற்போது அதிக அளவில் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. பனை மரத்தை வெட்டுவதை தடுக்க 2021-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசனையை தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்திராட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
அரசு பதிலளிக்க உத்தரவு
 
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, பனை மரங்கள் பாதுகாக்க 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2021 -ம் ஆண்டு அரசால் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இது வரை பனைமரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget