மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கஞ்சா பயன்பாடு சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் - நீதிபதி வேதனை
போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் எனக்கூறி மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
![கஞ்சா பயன்பாடு சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் - நீதிபதி வேதனை Madurai high court news Petition for bail of person in jail in ganja case order dismissing the petition TNN கஞ்சா பயன்பாடு சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் - நீதிபதி வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/a31ffc2c13ddaddc40f5f62aba977dbb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
கஞ்சா வழக்கில் சிறையில் உள்ளவர் ஜாமீன் வழங்கக்கோரி மனு
கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு பரவுவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும்- நீதிபதி வேதனை. ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டலத்தில் சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கஞ்சா வழக்கில் சிறையில் உள்ளவர் ஜாமீன் வழங்கக்கோரி மனு அளித்திருந்த நிலையில் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு 213 கிலோ கஞ்சா கடத்தியதாக குபேந்திரன் மற்றும் அவரது சகோதரர் ரவி மேலும் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருக்கும் மனுதாரர் குபேந்திரன் கஞ்சா கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2022ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை. காவல்துறையினர் பொய்யான வழக்கில் கைது செய்துள்ளதாக கூறி குபேந்திரன் ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
![கஞ்சா பயன்பாடு சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் - நீதிபதி வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/22/f60e93d8f58f6e759d2a01c23e797945_original.jpg)
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், மனுதாரர் வணிகரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார். காவல்துறை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மனுதாரரை கைது செய்துள்ளனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடு பரவுவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் எனக்கூறி மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை மாநகராட்சியை கண்டித்து கையில் துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்! காரணம் என்ன?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Leo OTT Release: “அண்ணன் வர்றார் வழிய விடு” .. ஓடிடிக்கு வரும் லியோ படம்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion