மேலும் அறிய

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது
அப்போது மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாரரின் மனு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் இரு தரப்பினரையும் அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் குழந்தையை வைத்திருப்பது மனுதாரரின் கணவர் என்பதும் தெரியவந்தது. குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர் என எழுத்துப்பூர்வமாக அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
 
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "மனுதாரரின் மைனர் குழந்தைகள் அவர்களது தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது. எனவே மனுதாரர் கோரிய நிவாரணத்தை ஆட்கொணர்வு மனுவில் தீர்க்க இயலாது. எனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தினை அணுகி தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

மற்றொரு வழக்கு
 
மேகமலையில் அனுமதியின்றி நடத்தப்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகளை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், சுற்றுலா விடுதியா ? அல்லது தொழிலாளர்களுக்கான குடியிருப்பா ? என்பதை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
 
தேனியைச் சேர்ந்த ஆனந்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "மேகமலையில் அனுமதியின்றி நடத்தப்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகளை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் மேகமலை வனப்பகுதியில் அனுமதி இன்றி 10 முதல் 20 தனியார் ரிசார்டுகள் இயங்கி வருகின்றன. அதில் மனுதாரரின் ரிசார்ட்டும் ஒன்று" என தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில், "ஒவ்வொரு கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பாகவும், முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. அதோடு நாங்கள் தனியார் ரிசார்ட்டை நடத்தவில்லை. தொழிலாளர்களுக்கான  குடியிருப்பையே நடத்தி வருகிறோம். அதற்காக வனத்துறையினரை அணுகிய போது வனத்துறையினரின் ஆவணங்களில் எங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் காப்புக்காடு பகுதிக்கு அப்பாற்பட்டு இருப்பதால் அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது"  என குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசுத்தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து நீதிபதிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஜானகியை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும், அவர் தேனி மாவட்ட வனத்துறை அலுவலருடன் இணைந்து குறிப்பிடப்படும் கட்டுமானத்தின் ஆவணங்களை ஆய்வு செய்து அது ரிசார்ட்டா? அல்லது தொழிலாளர்களுக்கான குடியிருப்பா ? என்பதை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்காக வழக்கறிஞருக்கு 50 ஆயிரம் ரூபாயை வழங்க மனுதாரருக்கும், வழக்கு தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் , தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget