மேலும் அறிய

Madurai ; நீட், மேகதாது: திமுக-வின் துரோகம் அம்பலம் - அமைச்சர் நிர்பல் குமார் சீற்றம்!

தமிழகத்தில் அறவழியில் நடக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மல்குமார்.

திமுக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு பின்னாடி துரோகம் செய்தது, விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் அதேசமயம் நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது- தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் வலிமையாக எடுப்பார் நம்மளை தவிர வேற யாரும் எடுக்கவும் முடியாது -  அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி.

 
மதுரை திருநகரில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்...,"
 
டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு:
 
மாணவர்கள் போராட்டத்தில் நமது நிலைப்பாடு ஏற்கனவே சொன்னது போல்  டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தோம். அற வழியில் நடைபெற்ற போராட்டத்திற்கு காவல்துறை நடத்திய தாக்குதல் கடும் கண்டனம் தெரிவித்தோம். நம்முடைய நிலைப்பாடு நீட்டு வேண்டாம் தேவையற்றது, அது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தரும் அதனால் எந்த பயனும் இல்லை, நீட் வேண்டாம் என்பது தான் நமது நிலைப்பாடு. போராட்டத்தில் நிறைய கோரிக்கைகள் உள்ளது டெல்லியில் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும். நம்முடைய நிலைப்பாடு நீட்டு வேண்டாம் தமிழகத்தில் அறவழியில் நடக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் நீட் தேர்வை மறுசீரமைப்பு செய்யவும் ஒரு சிலர் நீட் தேர்வை விளக்க வேண்டியும் போராடுகிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது நம்முடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 
 
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம். அவர் பதவி விலகினாலும் நீட்  தொடரும்.
நீட் க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் திமுக தலைவர்கள் பங்கேற்று நிறைய பேசி உள்ளார்கள்,இதை பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் இதை ஐந்து வருடத்தில் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றார்கள் திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள் தவறான நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்து. இப்போது இறங்கி மேடையில் பேசுகிறார்கள் நீட் தேர்வை பற்றி பேசும் தகுதி திமுகவினருக்கு கிடையாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளோம் நேரமும் காலமும் வரும்போது அதற்கான முதல் குரலாக நம்மளுடைய குரல் இருக்கும். 
 
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவிற்கு முதல்வர் சொல்லக்கூடாது அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென அன்புமணி கூறியது குறித்த கேள்விக்கு: 
 
இந்த விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாக முதல்வர் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். என்ன செய்ய வேண்டுமோ அதை ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் திமுக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு பின்னாடி துரோகம் செய்தது போல் விஷயங்கள் இருக்காது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் அதேசமயம் நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் வலிமையாக எடுப்பார். நம்மளை தவிர வேற யாரும் எடுக்கவும் முடியாது 
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு குறித்த கேள்விக்கு:
 
மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக தமிழக அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதை துவக்க வேண்டும் அதேபோல் மதுரை மருத்துவக் கல்லூரி மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யும் பணியும் துவக்கி உள்ளோம். 
 
ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்துவிட்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் விடும் காட்சிகள் பரவுவதும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்த கேள்விக்கும்
 
எங்கள் தலைவருடைய மூன்று வருடம் பயணத்தை பார்க்கிறோம் எங்க மனதில் ஓடினது அவருடைய கடுமையான பயணம் போராட்டம் எவ்வளவு பிரச்சனைகள் சந்தித்தார். அது அத்தனையும் தாண்டி இந்த படம் மிகப்பெரிய அளவில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நிப்பாட்ட நினைத்த அனைத்து தீய சக்திகளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் முதல்வரான பிறகு அதைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு அதை பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரசிகர்கள் கட்சிக்காரர்கள் படத்தை பார்க்கும் போது முதல்வருடைய மூன்று வருட போராட்டம் அதுதான் மனதில் வந்தது அதனால் இதனை சாதாரண படமாக பார்க்கவில்லை. 
 
விருதுநகரில் ஜனநாயகம் திரைப்படம் திரையிடும்போது விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ திரையிடப்பட்டதாக வரும் சர்ச்சை கொடுத்த கேள்விக்கு: 
 
அது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் யாரையும் சொல்லும் நோக்கத்திற்காக செய்யவில்லை. அங்கிருக்கும் நிர்வாகிகள் யாரோ தவறாக செய்திருப்பார்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு இதில் பெரிய உடன்பாடு இல்லை நிர்வாகிகள் தெரியாமல் போட்டு இருப்பார்கள் எம்எல்ஏக்கும் அதுக்கும் தொடர்பில்லை அது தெரிவிக்கவும் பட்டுள்ளது என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai ; நீட், மேகதாது: திமுக-வின் துரோகம் அம்பலம் - அமைச்சர் நிர்பல் குமார் சீற்றம்!
Madurai ; நீட், மேகதாது: திமுக-வின் துரோகம் அம்பலம் - அமைச்சர் நிர்பல் குமார் சீற்றம்!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
Embed widget