மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் திருசுதந்திரர்கள் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை 

திருச்செந்தூர் கோவில் திருசுதந்திரர்கள் தொடர்பாக, இந்து சமைய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்  ஏப்ரல் 1-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில், திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்களின்படி கைங்கர்யம் செய்வதற்காக அடையாள அட்டை பெறுவதற்காக திரிசுதந்திரர்கள் பெயர் மற்றும் முகவரி, காவல்துறை சான்று,  ஒழுங்கீனமாக நடந்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழி அளித்து விண்ணப்பிக்க வேண்டும். திருசுதந்திரர்கள் தனிப்பட்ட முறையில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக்கூடாது. பக்தர்களிடம் சண்டை, சச்சரவில் ஈடுபடக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது .இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர்  ஸ்ரீ ஜெயந்திநாதர் திரிசுதந்திரர்கள் காரியஸ்தர் ஸ்தானிகர் சபை செயலர் நாராயணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், "திருசுதந்திரர்களுக்கு கோயிலில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் கைங்கர்யம் செய்யும் உரிமையை நிலை நாட்டுவதற்கு உரிமை உள்ளது. ஆகவே அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஸ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு,  அந்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராமின்  உப்பளத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதனை அகற்றுமாறு பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை 
 
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அதில் " தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழஅரசரடி பகுதியில் 0.90 ஹெக்டர் பரப்பளவில் உப்பளம் நடத்தி வருகிறோம். இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் இவர்கள் அனைவரும், இந்த உப்பளத்தில் இருந்து வரும் வருமானத்தை நம்பியே உள்ளனர். காந்தி மல்லர் என்பவர், உப்பளம் அமைந்துள்ள இடங்களை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் வட்டாட்சி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் எங்கள் உப்பளம் அமைந்துள்ள பகுதி புறம்போக்கு நிலம் என வருவாய் துறை ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உப்பளத்தை அகற்ற வேண்டுமென்றும் கீழஅரசரடி பஞ்சாயத்து தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இதுநாள் வரை எல்லாவிதமான வரியையும் முறையாக கட்டியுள்ளேன். ஆகவே, தொடர்ந்து எங்கள் உப்பளத்தை இயக்கவும், உப்பளத்தை அகற்றுமாறு கீழஅரசரடி பஞ்சாயத்து  தலைவர் அனுப்பிய  நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் விஜயகுமார் அமர்வு கீழ அரசரடி கிராம பஞ்சாயத்து தலைவர்  அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை இதோடு தொடர்புடைய மற்றொரு வழக்குடன் பட்டியலிட  உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget