மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் திருசுதந்திரர்கள் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை 

திருச்செந்தூர் கோவில் திருசுதந்திரர்கள் தொடர்பாக, இந்து சமைய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்  ஏப்ரல் 1-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில், திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்களின்படி கைங்கர்யம் செய்வதற்காக அடையாள அட்டை பெறுவதற்காக திரிசுதந்திரர்கள் பெயர் மற்றும் முகவரி, காவல்துறை சான்று,  ஒழுங்கீனமாக நடந்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழி அளித்து விண்ணப்பிக்க வேண்டும். திருசுதந்திரர்கள் தனிப்பட்ட முறையில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக்கூடாது. பக்தர்களிடம் சண்டை, சச்சரவில் ஈடுபடக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது .இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர்  ஸ்ரீ ஜெயந்திநாதர் திரிசுதந்திரர்கள் காரியஸ்தர் ஸ்தானிகர் சபை செயலர் நாராயணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், "திருசுதந்திரர்களுக்கு கோயிலில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் கைங்கர்யம் செய்யும் உரிமையை நிலை நாட்டுவதற்கு உரிமை உள்ளது. ஆகவே அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஸ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு,  அந்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராமின்  உப்பளத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதனை அகற்றுமாறு பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை 
 
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அதில் " தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழஅரசரடி பகுதியில் 0.90 ஹெக்டர் பரப்பளவில் உப்பளம் நடத்தி வருகிறோம். இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் இவர்கள் அனைவரும், இந்த உப்பளத்தில் இருந்து வரும் வருமானத்தை நம்பியே உள்ளனர். காந்தி மல்லர் என்பவர், உப்பளம் அமைந்துள்ள இடங்களை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் வட்டாட்சி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் எங்கள் உப்பளம் அமைந்துள்ள பகுதி புறம்போக்கு நிலம் என வருவாய் துறை ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உப்பளத்தை அகற்ற வேண்டுமென்றும் கீழஅரசரடி பஞ்சாயத்து தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இதுநாள் வரை எல்லாவிதமான வரியையும் முறையாக கட்டியுள்ளேன். ஆகவே, தொடர்ந்து எங்கள் உப்பளத்தை இயக்கவும், உப்பளத்தை அகற்றுமாறு கீழஅரசரடி பஞ்சாயத்து  தலைவர் அனுப்பிய  நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் விஜயகுமார் அமர்வு கீழ அரசரடி கிராம பஞ்சாயத்து தலைவர்  அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை இதோடு தொடர்புடைய மற்றொரு வழக்குடன் பட்டியலிட  உத்தரவிட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget