மேலும் அறிய

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அமலாக்கத்துறை அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை துணை இயக்குனர் அங்கித்திவாரி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 ஆம் முறையாக  மனு தாக்கல் செய்திருந்தார்.

மனு தாக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனக்கு 3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரியும் துணை இயக்குநர் அங்கித் திவாரி மருத்துவரை அணுகி உள்ளார். இதனால் டாக்டர் சுரேஷ் பாபு  திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார்  ரசாயன கலவைகள் தடவிய 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்த போது வாங்கி கொண்டு தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை, லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை காரில் விரட்டி பிடித்து கைது செய்தது சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில்  திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம்  மனுவை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கு திவாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அங்கித் திவாரி:

கைது செய்யப்பட்டு 100  நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம் எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்த போது, மனுவை தான் விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் உள்ளது. எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி ஜாமீன் கோர முடியாது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் கையூட்டு பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது தேசத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

தள்ளுபடி:

சட்டவிரோத செயல்களை, லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமானவரித்துறை,  அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதை சகித்துக்கொள்ள முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளது. உச்சநீதிமன்றம் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளதால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மனுதாரர் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget