மேலும் அறிய

ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி திருவிழா பூஜை நடத்த அறங்காவலர் குடும்பத்தினருக்கு அனுமதி மறுத்த அறநிலைத்துறையினர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில். இத்திருக்கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  இந்த கோயில் தற்போது அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோயில் பரம்பரை அறங்காவலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றமும் கோயிலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஊட்டி வர்க்கி: புவிசார் குறியீடு பெற்று அசத்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

இந்நிலையில், இந்து சமய அறநிலை துறை சார்பில் இந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெரும் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காரணம் கோயிலில் கொடிமரம் மற்றும் உப சன்னதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

Sonu Sood : உணவில் எச்சில் துப்பியதை நியாயப் படுத்திய நடிகர் சோனு சூட்... இணையத்தில் வலுக்கு கண்டனங்கள்


ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

அதனால் இந்த ஆண்டு திருவிழா கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து திருவிழா ரத்து என அறிவிக்கப்பட்டது. ஆனால் திருவிழா நடைபெற வேண்டும் என்றும் திருவிழாவில் கோயிலில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கிட கோரி அறங்காவலர் குழுவினர் நீதிமன்றத்தை நாடி பூஜை செய்வதற்கு அனுமதி பெற்று வந்தனர். கடந்த முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு திருவிழா துவங்கியது. இதில் பூஜை செய்வதற்கு அறங்காவர் குழுவினர் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பு நிறையும் அழைத்து காவல்துறையினர் போடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மகளிர் தொகை கொடுத்துவிட்டு நாங்க படுற பாடு இருக்கே? - புலம்பிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்


ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

இதில் பூஜை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த பூஜையானது கருவறைக்குள் சென்று நடத்துவதா? அல்லது கோயில் வளாகத்தில் பூஜை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்று தெளிவாக குறிப்பிடவில்லை. மேலும் அறநிலை துறை அதிகாரிகள்  உயர் அதிகாரிகளிடமும் வழக்கறிஞர் குழுவிடமும் இந்த தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனை மேற்கொண்டு மூன்று தினங்களுக்கு பின்பே இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து பரம்பரை அறங்காவலர் குழுவினர் தாங்கள் நீதிமன்றம் மூலமாக மீண்டும் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறோம் என்று கூறி சென்றனர். ஆடிப்பெரும் திருவிழா நடைபெறும் இந்த சூழலில் இச்சம்பவம் நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget