மேலும் அறிய

ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி திருவிழா பூஜை நடத்த அறங்காவலர் குடும்பத்தினருக்கு அனுமதி மறுத்த அறநிலைத்துறையினர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில். இத்திருக்கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  இந்த கோயில் தற்போது அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோயில் பரம்பரை அறங்காவலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றமும் கோயிலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஊட்டி வர்க்கி: புவிசார் குறியீடு பெற்று அசத்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

இந்நிலையில், இந்து சமய அறநிலை துறை சார்பில் இந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெரும் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காரணம் கோயிலில் கொடிமரம் மற்றும் உப சன்னதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

Sonu Sood : உணவில் எச்சில் துப்பியதை நியாயப் படுத்திய நடிகர் சோனு சூட்... இணையத்தில் வலுக்கு கண்டனங்கள்


ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

அதனால் இந்த ஆண்டு திருவிழா கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து திருவிழா ரத்து என அறிவிக்கப்பட்டது. ஆனால் திருவிழா நடைபெற வேண்டும் என்றும் திருவிழாவில் கோயிலில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கிட கோரி அறங்காவலர் குழுவினர் நீதிமன்றத்தை நாடி பூஜை செய்வதற்கு அனுமதி பெற்று வந்தனர். கடந்த முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு திருவிழா துவங்கியது. இதில் பூஜை செய்வதற்கு அறங்காவர் குழுவினர் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பு நிறையும் அழைத்து காவல்துறையினர் போடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மகளிர் தொகை கொடுத்துவிட்டு நாங்க படுற பாடு இருக்கே? - புலம்பிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்


ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

இதில் பூஜை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த பூஜையானது கருவறைக்குள் சென்று நடத்துவதா? அல்லது கோயில் வளாகத்தில் பூஜை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்று தெளிவாக குறிப்பிடவில்லை. மேலும் அறநிலை துறை அதிகாரிகள்  உயர் அதிகாரிகளிடமும் வழக்கறிஞர் குழுவிடமும் இந்த தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனை மேற்கொண்டு மூன்று தினங்களுக்கு பின்பே இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து பரம்பரை அறங்காவலர் குழுவினர் தாங்கள் நீதிமன்றம் மூலமாக மீண்டும் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறோம் என்று கூறி சென்றனர். ஆடிப்பெரும் திருவிழா நடைபெறும் இந்த சூழலில் இச்சம்பவம் நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget