மேலும் அறிய

Kodaikanal: நாளை முதல் கொடைக்கானல் வர இ - பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது?

கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிமாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாளை முதல் இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவுசெய்து வர வேண்டும். சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.


Kodaikanal: நாளை முதல் கொடைக்கானல் வர இ - பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது?

கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் 07.05.2024 (நாளை) அன்று முதல் 30.06.2024வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை முன்னிட்டு, இ-பாஸ் (ePass) முறையை அமல்படுத்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் TNEGA-வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள், வணிகம்,வியாபார வேலையாக வருபவர்களும் இ-பாஸ் பதிவு செய்து கொடைக்கானலில் பயணம் மேற்கொள்ளலாம். இ-பாஸ் தேவைப்படுபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கியூ ஆர் கோட் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Kodaikanal: நாளை முதல் கொடைக்கானல் வர இ - பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது?

இ-பாஸ் பெறுவது எப்படி?

மேலும், நமது நாட்டைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் அவர்களது கைப்பேசி எண் வாயிலாகவும், வெளிநாடுகளிலிருந்து கொடைக்கானலுக்கு வருகை தருபவர்கள் அவர்களது இ-மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களை சமர்ப்பித்து, இ-பாஸ் பதிவு செய்து கொண்டு, பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த மென்பொருளில் சுற்றுலா பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை புரிகிறார்கள், வாகனத்தில் எத்தனை நபர்கள் வருகிறார்கள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட ஒவ்வொரு வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து வருகை தர வேண்டும். கொடைக்கானலில் கோடைகாலத்தையொட்டி, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் பரிச்சார்த்த முறையில் இந்த இ-பாஸ் நடைமுறை 07.05.2024 முதல்30-06-2024 வரை அமல்படுத்தப்படுகிறது. மேலும், கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசுப் பேருந்துகளின் விபரங்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விவரங்கள் நேரிடையாக போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.


Kodaikanal: நாளை முதல் கொடைக்கானல் வர இ - பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது?

அரசு பேருந்துகளில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த இ பாஸ் 3 வகையான அடையாள கோடுகளுடன் வழங்கப்படவுள்ளது. உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சைநிற அடையாளக் கோட்டுடனும்,வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படைதேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீலம் நிற அடையாளக்கோட்டுடனும், சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாளக்கோட்டுடனும் இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடைக்கானல் நகராட்சியின்(வெள்ளி நீர்வீழ்ச்சி) சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரையிலான காலகட்டத்திற்கு ஒருமுறை மட்டும்விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெற்றுக்கொண்டால் போதுமானது.

உள்ளுர் இ-பாஸ் வழங்க நடவடிக்கை

மேற்காணும் சுங்கச்சாவடியின் சுங்கக் கட்டண விலக்கிலிருந்து விடுபட்ட உள்ளுர் வாகனங்களுக்கு, வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் வத்தலகுண்டு பகுதி வட்டாரபோக்குவரத்து அலுவலகம் அல்லது சுங்கச்சாவடி (வெள்ளிநீர்வீழ்ச்சி) அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையத்தில் பதிவு செய்து உள்ளுர் இபாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர்.


Kodaikanal: நாளை முதல் கொடைக்கானல் வர இ - பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது?

மொபைல் செயலி மூலம் கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன்

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விவரங்களை தெரிந்துகொள்வதோடு, இந்த நடைமுறையினை கண்காணிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர் வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டாரபோக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல்30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும்"epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல்இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், எனமாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Embed widget