மேலும் அறிய

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தென் மண்டல காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

காவல்துறை துணை தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு.

நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்த காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “2018ஆம் ஆண்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தேன். அப்போது அரசு தரப்பில் என் மீது பதியப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரணை செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பின் என் மீது பதியப்பட்ட வழக்கின் இறுதி அறிக்கை நகலை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் கேட்கும்போது நீதிமன்றத்தில் தற்போது வரை இறுதி அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தனர். எனவே, நீதிமன்றத்தில் தவறுதலாக அறிக்கை அளித்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு முந்தைய விசாரணையில், நீதிமன்றத்தில் காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது நீதிமன்ற பணியாளர்கள் நேரம், தேதி, முத்திரை, கையெழுத்து உடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் இதனை மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க மேலும் வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை தென் மண்டல காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர் பதில் மனு தாக்கல் செய்தார். ஒப்புகை சீட்டு வழங்க உத்தரவிட்டதன் பின்பு கடந்த 2 மாதத்தில் 2011 முதல் 2021 வரை 65000 வழக்குகளில் 25000 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புகை சீட்டு பெறப்பட்டுள்ளது.  38000  வழக்குகளில் தடவியல் துறை அறிக்கை, பிறதுறைகளில் இருந்து அறிக்கை பெறப்பட வேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முன்பை விட அதிகமான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, தென் மண்டல காவல்துறை தலைவர், துணை காவல்துறை தலைவர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

காவிரி ஆற்றில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
 
கரூரை சேர்ந்த சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "தனியார் கழிவறைகளின் கழிவுகளை  அருள்மிகு மடுகரை செல்லாண்டி அம்மன் திருக்கோயில் அருகே, காவிரி ஆற்றில் விடுவதாகவும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி  சந்திரசேகரன் அமர்வு, "இந்த வழக்கை பொறுத்தவரை காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கழிவறைகளை கட்ட உத்தரவிட வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பில் இரண்டு மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே சமயம், இனிவரும் காலங்களிலும் காவிரி ஆற்றில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget